174கற்பியல்
சூ. 162 :

காமக் கடப்பினுள் பணிந்த கிளவி

காணுங் காலைக் கிழவோற் குரித்தே

வழிபடு கிழமை அவட்கிய லான

(19)
 

க - து :

தலைமகட்குரிய தோரியல்பு தலைமகற்காகும் இடம் கூறுகின்றது.
  

பொருள் :தலைவனை   வழிபட்டுப்  பணிமொழி   கூறி   ஒழுகுதல்
மனையறத்தை  மேற்கொண்டொழுகும்  தலைவிக்கு இயல்பாகலான் (அவள்
பணிமொழி  காமவேட்கையான்  நிகழ்வதன்று)  காம  வேட்கை    இகந்த
விடத்து நிகழும் பணிந்த மொழி ஆராயுமிடத்துத் தலைவற்கு உரியதாகும்.
 

என்றது  :   காமங்கையிகந்தவிடத்துக்   கிழவோன்   தன்  தலைமை
நோக்காது  தலைவியைப்   பணிந்தொழுகுதல்   கற்பின்கண்  உரித்தாகும்
என்றவாறு.
 

எ - டு : 

ஒரூஉ, கொடியியல் நல்லார் என்னும் மருதக்கலியுள்
(88)
 

"ஆயிழை

நின்கண்பெறினல்லால் இன்னுயிர் வாழ்கல்லா

என்கண் எவனோ தவறு" எனவும்

"அதுதக்கது

வேற்றுமை என்கண்ணோ ஓராதி தீதின்மை

தேற்றக்கண் டீயாய் தெளிக்கு" எனவும்,

தலைவன் பணிமொழி கூறியாறு கண்டு கொள்க.
 

சூ. 163 :

அருள்முந் துறுத்த அன்புபொதி கிளவி

பொருள்பட மொழிதல் கிழவோட் குரித்தே
 

க - து :

தலைவிக்குரியதோ ரியல்பு கூறுகின்றது.
 

பொருள் :அருளை  முதன்மையாக உடைய அன்பினை உட்பொதிந்த
சொற்களான்  தான்  கருதும்  பொருள்  விளங்கக்  கூறுதல்   தலைவிக்கு
உரியதாகும்.
 

எ - டு : 

ஆங்க, கடைஇய நின்மார்பு தோயலம் என்னும்

இடையும் நிறையும் எளிதோ நிற்காணின்

கடவுபு கைத்தாங்கா நெஞ்சென்னும் தம்மொடு

உடன்வாழ் பகையுடையார்க்கு" (கலி-77) எனவரும்.
 

சூ. 164 :

களவும் கற்பும் அலர்வரை வின்றே
 
(21)

க - து :

இருவகை  கைக்கோளிலும் அலர் கூறுதலைப் பற்றியதொருமரபு
கூறுகின்றது.