கற்பியல்175

பொருள் :  களவின்கண்ணும்  கற்பின்கண்ணும்  அலர்  எழா நின்றது
எனக் கூறும் கூற்றுத் தோழிக்கும் தலைவிக்கும் நீக்கும் நிலைமையின்று.
 

தோழி   கூற்றும்  தலைவி  கூற்றும்    அதிகாரப்பட்டு    வருதலின்
அவ்விருவரும் கொள்ளப்பட்டனர்.
 

எ - டு :

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்புகொண் டற்று

(குறள்-1146)
 

இதுகளவு.
 

வேதின வெரிநின் ஓதி முதுபோத்து

ஆறுசெல் மாக்கள் புட்கொளப் பொருந்தும்

சுரனே சென்றனர் காதலர் உரனழிந்து

ஈங்கியான் தாங்கிய எவ்வம்

யாங்கறிந் தன்றிவ் அழுங்க லூரே

(குறு-140)
 

இதுகற்பு. இவை தலைவி கூற்று.
 

 

'கரும்பின் எந்திரம்' என்னுங் ஐங்குறுநூறு
(55)
 

தோழி அலர் கூறியது.
 

சூ. 165 :

அலரிற் றோன்றும் காமத்து மிகுதி
(22)
 

க - து :

அலர் எழுதலான் எய்தும் பயன் கூறுகின்றது.
 

பொருள் : அலர் காரணமாகத்  தலைவன்  தலைவியரிடத்துக்  காதற்
காம உணர்வு மிக்கு விளங்கும்.
  

எ - டு :

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்

நீராக நீளும்இந் நோய்

(குறள்-1147)
 

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றாற் கௌவையாற்

காமம் நுதுப்பேம் எனல்

(குறள்-1148)
 

கௌவை = அலர். என்றாங்குக்காண்க.
 

சூ. 166 :

கிழவோன் விளையாட் டாங்கும் அற்றே
(23)
 

க - து :

காமமிகுதி     தோன்றுதற்கு     மற்றுமொரு    காரணமாமாறு
கூறுகின்றது.
 

பொருள் :  தலைவன்  பரத்தையரொடு  ஆடலும்,  பாடலும், யாறும்,
குளனும்   படிந்து   நீராடலும்  ஆகிய  விளையாட்டினை மேற்கொள்ளும்
அவ்விடத்தும் காதற்காம உணர்வு மிக்குத் தோன்றும்.