| எ - டு : | "எஃகுடை எழில் நலத் தொருத்தியொடு நெருநை |
| வைகுபுன லயர்ந்தனை என்ப அதுவே |
| பொய்புறம் பொதிந்து யாம்கரப்பவும் கையிகந்து |
| அலரா கின்றாற் றானே" |
(அக-116) |
என வருதல் காண்க. |
| சூ. 167 : | மனைவி தலைத்தாட் கிழவோன் கொடுமை |
| தம்முள வாதல் வாயில்கட் கில்லை |
(24) |
க - து : | வாயில்களின் கூற்றுப் பற்றிய தொரு மரபு கூறுகின்றது. |
பொருள் : மனையறக் கிழமை பூண்டொழுகும் தலைவியிடத்துத் தலைவனது புறத்தொழுக்கமாகிய கொடுமைகளை, அவள் புலவி தீர்தற் பொருட்டு உரைக்கும் தம் கூற்றிடத்து உளவாக உரைத்தல் வாயில்கட்கு இல்லை. |
உளவாக்கியுரைப்பின் அது புறங்கூறுதல் என்னும் குற்றத்தின் பாற்படுமாகலானும் அதனான் தலைவியது புலவி மிகுதலன்றித் தீராதாகலானும் இல்லை என்றார். |
தலைத்தாள் என்பதனைத் தாட்டலை என மாறுக என்றும் அதன் பொருள் பாதத்திடத்து என்பதாம் எனவும் அஃதொரு தகுதிச்சொல் எனவும் விளக்குவார் நச்சினார்க்கினியர். அவ் விளக்கம் ஒக்கும். எ.டு : வாயில்களின் கூற்றினுட் கண்டு கொள்க. |
| சூ. 168 : | மனைவி முன்னர்க் கையறு கிளவி |
| மனைவிக் குறுதி உள்வழி யுண்டே |
(25) |
க - து : | இதுவுமது. |
பொருள் :தலைவியின் முன்னர்த் தலைவனது கொடுமையை எண்ணிச் செயலற்றுக் கூறும் கூற்றுத் தலைவியது புலவியை நீக்கி ஆக்கம் பயக்கும் என்னும் உறுதியமையுமிடத்து அவ்வாயில்கட்கு உளதாகும். |
| எ - டு : | அறியா மையின் அன்னை யஞ்சிக் |
| குழையன் கோதையன் குறும்பைந் தொடியன் |
| விழவயர் துணங்கை தழூஉகம் செல்ல |
| நெடுநிமிர் தெருவிற் கைபுகு கொடுமிடை |
| நொதும லாளன் கதுமெனத் தாக்கலின் |
| கேட்போர் உளர்கொல் இல்லைகொல் போற்றென |