கற்பியல்177

யாண்டைய பசலை என்றனன் அதனெதிர்

நாணிலை எலுவ என்றுவந் திசினே

செருநரும் விழையும் செம்மலோ னென

நறுநுத லரிவை போற்றேன்

சிறுமை பெருமையிற் காணாது துணிந்தே

(நற்-50)
 

இது  தலைவனது  கொடுமையைத்   தோழி  புனைந்துரை   வகையாற்
கூறியது.
 

சூ. 169 :

முன்னிலைப் புறமொழி எல்லா வாயிற்கும்

பின்னிலைத் தோன்றும் என்மனார் புலவர்

(26)
 

க - து :

இதுவுமது.
 

பொருள் :  குறையிரந்து  வேண்டுதலாகிய  பின்னிலை  முயற்சிக்கண்
தோழி   முதலாய   எல்லாவாயில்கட்கும்  முன்னிலைப்   புறமொழியாகக்
கூறும் கூற்றுத் தோன்றுமெனக் கூறுவர் புலவர்.
  

முன்னிலைப்   புறமொழியாவது     முன்னிலையாரைப்     படர்க்கை
யாகப்புறப்படுத்து அவர்க்குரைப்பது.
 

எ - டு :

உண்கடன் வழிமொழிந் திரக்குங்கால் முகனும்தாம்

கொண்டது கொடுக்குங்கால் முகனும் வேறாகுதல்

பண்டுமிவ் வுலகத் தியற்கை அஃதின்றும்

புதுவ தன்றே புலனுடை மாந்திர்

தாயுயிர் பெய்த பாவை போல

நலனுடையார் மொழிக்கட் டாவார்தாந் தந்நலம்

தாதுவேர் பறவையின் அருந்திறல் கொடுக்குங்கால்

ஏதிலார் கூறுவதெவனோ நின்பொருள் வேட்கை

(கலி-22)
 

எனவந்தவாறு கண்டு கொள்க.
 

சூ. 170 :

தொல்லவை யுரைத்தலும் நுகர்ச்சி ஏத்தலும்

பல்லாற் றானும் ஊடலிற் றணித்தலும்

உறுதி காட்டலும் அறிவுமெய்ந் நிறுத்தலும்

ஏதுவின் உரைத்தலும் துணிவு காட்டலும்

அணிநிலை யுரைத்தலும் கூத்தர் மேன

(27)
 

க - து :

இது   வாயில்களுள்  கூத்தர்க்குரிய   கிளவி   பற்றிய    மரபு
கூறுகின்றது.
 

பொருள் :  தொல்லவையுரைத்தலும் = பண்டையோரின் சிறந்த காதல்
வாழ்வு பற்றிய வரலாறுகளை எடுத்தியம்பலும்,