229, 233-242, 245-247. இவற்றுள் 206, 209, 211, 212, 213, 215, 216, 217, 219, 220, 226, 228, 233-238 என்பன வழுவமைதி பற்றிய செய்திகளை நுவல்வன. ஏனையவை அகப்பொருளுக்குரிய ஒழிபியற் செய்திகள். இவ்வுரையாளர் கருத்துப்படியமைந்த நூற்பாக்களும் வழுவமைதிச் செய்திகளை நுவல்வனவாகக் கோடல் இழுக்காகாது. உரை விளக்கங்களான் முன்னைய உரையாசிரியர்களின் கருத்துக்கள் ஒவ்வாதன என்ற செய்தி நிறுவப்படவில்லை. எனவே இவர் கூறும் விளக்கம், எச்சவியல் என்ற பெயர் பத்துவகை எச்சங்களைப் பற்றிக் குறிப்பிட்ட காரணத்தால் ஏற்பட்டது என்றாற்போல்வது. எனவே இவர் கூறும் பெயர்க்காரணத்துக்குத் தலைமையும், நூற்பாப் பன்மையும் இல்லை என்பது கருதப்படுகிறது.8 |