200பொருளியல்

இவை  துன்பமும் இன்பமும் நிலைக்களமாகக் காமங்கண்ணிய மரபிடை
தெரிய வந்தன.
 

        

"கானலுங் கழறாது கழியும் கூறாது

தேனிமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது

ஒருநீ யல்லது பிறிதுயா துமிலனே

இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தல்

கமழிதழ் நாற்றம் அமிழ்தென நசைஇத்

தண்டா தூதிய வண்டினம் களிசிறந்து

பறைஇய தளருந் துறைவனை நீயே

சொல்லல் வேண்டுமார் அலவ"

(அக-170)
 

என்பது  சொல்லா மரபின சொல்லுவனவாக அழுகை பற்றிக் கூறியது. இது தலைவி கூற்று.
 

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமஞ் செப்பாது கண்டது மொழிமோ

(குறு-2)
 

என்பது  சொல்லா  மரபினது சொல்லுவதாக  உவகை பற்றிக் கூறியது. இது
தலைவன் கூற்று.
 

"போர்தொலைந் திருந்தாரைப் பாடெள்ளி நகுவார்போல்

ஆரஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ"

(கலி-120)
 

என்பது  செய்கையில்லாத  மாலைப்   பொழுதினைத்  தொழிற்படுத்தடக்கி
உவமவாயிற் படுத்துக்கூறியது. இது தலைவி கூற்று.
 

       

"தொல்லூழி தடுமாறி" என்னும் நெய்தற்கலியில்

(129)

"பாய்திரை பாடோவாப் பரப்புநீர்ப் பனிக்கடல்

தூவறத் துறந்தனன் துறைவன்என் றவன்றிறம்

நோய்தெற உழப்பார்கண் இமிழ்தியோ எம்போலக்

காதல்செய் தகன்றாரை உடையையோ நீ"
 

என்பது  தம்பிணிக்கு  வருந்தினவாகச்  சேர்த்தி   உவமவாயிற்  படுத்துக்
கூறியது.
 

"சென்றது கொல் போந்தது கொல் ...... நெஞ்சு"
 

என்பது கைக்கிளைக்கண்  நெஞ்சினை   உறுப்புடையது  போல்  அவலம்
பற்றிக் கூறியது.
 

ஓங்கெழிற் கொம்பர் நடுவிதெனப் புல்லும்

.... ...... ...... ...... ....... ..... ....... ....... ...... ......

ஆள்வலி மிக்கான் அஃதறி கல்லான்

(நச்-மேற்)