| ஊடல் யாங்குவந் தன்றுஎன, யாழநின் |
| கோடேந்து புருவமொடு குவவுநுதல் நீவி |
| நறுங்கதுப் புளரிய நன்னர் அமையத்து |
| வறுங்கை காட்டிய வாயல் கனவின் |
| ஏற்று ஏக்கற்ற உலமரல் |
போற்றா யாகலின் புலத்தியால் எம்மே" |
எனக்கனவு கண்டு கூறியமை காண்க. பிறவும் அன்ன. இதற்கு நச்சினார்க்கினியர் கூறும் உரை மேல்வரும் சூத்திரத்தொடு இயையாமையின் மயங்கவைத்தலாய் நிற்பதையறிக. |
சூ. 200 : | தாய்க்கும் உரித்தால் போக்குடன் கிளப்பின் |
(4) |
க - து : | கனாக்கண்டுரைத்தல் இன்னுழித் தாயர்க்கும் உரித்தென்கின்றது. |
பொருள் : தலைவனும் தலைவியும் உடன்போக்குச் சென்ற நிலைமையுடன் கூற்று நிகழ்த்துமாயின் கனாக்கண்டுரைத்தல் செவிலிக்கும் நற்றாய்க்கும் உரியதாகும். |
உம்மை எச்சஉம்மை. 'தாய்' என்றது ஏவல் இளையர் தாய் வயிறு கரிப்ப என்புழிப் போலப் பன்மை குறித்து நின்றது. அஃது இருவரையும் குறித்தலை வரும் சூத்திரத்தானும் அறிக. |