வருவதோர் பண்பு. இதனைக், |
கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் |
நல்லவர் நாணுப் பிற |
(குறள்-1011) |
என்னும் பொய்யா மொழியான் அறிக. அவ்வாறே மடம் என்பதும் அறியாமையாகிய பண்பினைச் சுட்டி நின்றது. கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமையாகிய பெண்மைக் குணமாகிய 'மடம்' வேறு. இதுவே றென அறிக. இதனை, |
உடமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா |
மடமை மடவார்கண் உண்டு |
(குறள்-89) |
எனவும், |
நாணு மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் |
மாணா மடநெஞ்சிற் பட்டு. |
(குறள்-1297) |
எனவும் |
வருவனவற்றான் அறிக. இச்சூத்திரத்திற்கு உரையாசியன்மார் கூறும் உரையும் விளக்கமும் இயைபின்றியும் கூறியது கூறலாயும் உள்ளமை அறிக. |
| சூ. 203 : | வண்ணம் பசந்து புலம்புறு காலை |
| உணர்ந்தது போல உறுப்பினைக் கிளவி |
| புணர்ந்த வகையாற் புணர்க்கவும் பெறுமே |
(7) |
க - து : | இது "நோயும் இன்பமும்" என்னும் சூத்திரத்தான் எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. |
பொருள்:தலைவி தன்மேனி வனப்புத்திரிந்து தனிப்படர் உறும் காலத்துத் தனது நிலையைத் தனது உறுப்பு ஒவ்வொன்றும் உணர்ந்துள்ளமைபோல அதற்குப் பொருந்திய வகையாற் புனைந்து கூறவும் பெறும். |
| எ - டு : | தணந்தமை சால அறிவிப்ப போலும் |
| மணந்தநாள் வீங்கிய தோள் |
[குறள்-1233] |
| நாணில மன்றஎம் கண்ணே நாண்நேர்பு |
| சினைப்பசும் பாம்பின் சூல்முதிர்பு அன்ன |
| கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ |
| நுண்ணுறை அழிதுளி தலைஇய |
| தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே |
(குறு-35) |
"புணர்ந்த வகையான்" என்றதனான் அவை செயற்படுவன போலக் கூறலும் கொள்க. |
கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே இவைஎன்னைத் |
தின்னும் அவர்க்காண லுற்று |
(குறள்-1244) |
| எனவரும். |