உம்மையான் உறுப்பொடு தொடர்புடையவற்றைக் கூறலும் கொள்க. |
| தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் |
| முன்னம் உணர்ந்த வளை |
(குறள்-1277) |
எனவரும். |
| சூ. 204 : | உடம்பும் உயிரும் வாடியக் காலும் |
| என்னுற் றனகொல் இவையெனின் அல்லதை |
| கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை |
(8) |
க - து : | இதுவுமது. |
பொருள் :தன்மேனியும் ஐம்புலத்துணர்வும் தேய்ந்து மெலிவுற்றபோதும் இவை உற்றதுயர் என்கொல்? என அவற்றிற்கு இரங்குவாள் போலக் கூறினல்லது தலைவன் உறையும் இடம் நாடிச்செல்லுதல் தலைவிக்குப் புலனெறி வழக்கு ஆமாறில்லை. |
| எ - டு : | கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும் |
| இதுநகத் தக்க துடைத்து |
(குறள்-1173) |
எனவரும் |
| ஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் |
| தாஅம் இதற்பட் டது. |
(குறள்-1176) |
என்பன இதன்பாற்படும். |
| சூ. 205 : | ஒருசிறை நெஞ்சமொ டுசாவுங் காலை |
| உரிய தாகலும் உண்டென மொழிப |
(9) |
க - து : | மேலதற்கொரு புறனடை கூறுகின்றது. |
பொருள் :ஒருமருங்கு தலைவி தன் நெஞ்சத்தொடு வினவி உரைக்குங் காலத்து, மேல், இல்லை எனப்பட்ட கிழவோன் உறையுமிடஞ் சேர்தல் உரியதாகலும் உண்டு என்று கூறுவர் புலவர். |
ஒரு சிறை = ஒரு கூறு. என்றது செயற்படுதலின்றிக் கூற்றாக நிகழுமிடத்து என்றவாறு. |
| எ - டு : | கோடீர் இலங்குவளை நெகிழ நாளும் |
| பாடில கலுழும் கண்ணொடு புலம்பி |
| ஈங்கிவண் உறைதலும் உய்குவம் ஆங்கே |
| எழுஇனி வாழியென் நெஞ்சே முனாது |
| குல்லைக் கண்ணி வடுகர் முனையது |
| வல்வேற் கட்டி நன்னாட் டும்பர் |