பொருளியல்207

"யாரிவன்   எம்கூந்தல்  கொள்வான்"  என்னும்  மருதக்  கலியுள் (99)
"இன்னகை! தீதோ இலேன்"! என்ற தலைவனைத் துனியான் முனியாது
 

"மாண மறந்துள்ளா நாணிலிக் கிப்போர்

புறம்சாய்த்துக் காண்டைப்பாய் நெஞ்சே உறழ்ந்திவனைப்

பொய்ப்ப வீடேஎம்என நெருங்கின் தப்பினேன்
 

என்றடி   சேர்தலும்   உண்டு" என  அவன்வயின்   வேட்டல்   ஏதுவாக
நெஞ்சிற்குக் கூறியமை கண்டு கொள்க.
 

"அன்ன"   இடன்     என்றதனான்   தலைவன்பாற்   புறத்தொழுக்கு
இல்லையாகவும் உள்ளதெனக் கற்பித்துக்கொண்டு கூறலும் கொள்க.
 

எ - டு :

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்

யாரினும் யாரினும் என்று

(குறள்-1314)
 
எனவரும்.
 
சூ. 207 :

அறத்தொடு நிற்குங் காலத் தன்றி

அறத்தியல் மரபிலள் தோழி என்ப

(11)
 

க - து :  களவியலுள்    "பிறன்வரை   வாயினும்,  அவன்  வரைவு மறுப்பினும்,  முன்னிலை   அறனெனப்  படுதல்என்று இருவகைப் புரைதீர்
கிளவி தாயிடைப்   புகுப்பினும்"  எனத்  தோழிக்குரிய அறத்தொடு நிற்றல்
தலைவியது உடன்பாடின்றி நிகழாது என்கின்றது.
 

பொருள் :  மனைப்பட்டுக்   கலங்கிச்    சிதைந்தவழித்   தோழிக்கு
நினைத்தல்   சான்ற அருமறை  யுயிர்த்தலும்  (கள-21) எனவும், வெறியாட்
டிடத்து  வெருவின்  கண்ணும் எனவும் (கள-21)  உரையெனத்   தோழிக்கு
உரைத்தற்  கண்ணும் (கள-22) எனவும் கூறியவாற்றான் களவொழுக்கத்தைத்
தலைவி   தமர்க்கு   அறிவித்தல் வேண்டும்    என்னும்   கருத்தினளாய
காலத்தன்றித் தோழி  தானே அறத்தொடு  நிற்கும்  முறைமையிலள் எனக்
கூறுவர் நூலோர்.
 

அறத்தொடு  நிற்றலாவது : களவொழுக்கத்தைப்  பொருந்திய  தலைவி
பின்னர்  வரைந்து  கொண்டு  இல்லறமாகிய  மனை  யறத்தை   மேவுதல்
குறிக்கோளாதலின்   அதற்கு    இடையூறாக  வெறியாட்டெடுத்தல், பிறன்
வரைவு   ஆய்தல்  முதலியவை   நிகழுமாயின்   தனது  கற்பிற்கு  ஊறு
நேருங்கொல்  என  அஞ்சித்  தான்   களவின் மணந்த   தலைவனையே
வரைந்தெய்துதற்  பொருட்டுத்  தோழி  வாயிலாகத்  தன்  மனநிலையைத்
தமர்க்குக் குறிப்பான் அறிவிக்கச் செய்தலாகும். அது கற்பொழுக்கமாகிய