நீதவறு டையையும் அல்லை நின்வயின் |
ஆனா அரும்படர் செய்த |
யானே தோழி தவறுடை யேனே" |
என்பது தன்னையழிந்து கூறியது. |
அஞ்சுவல் வாழி ஐய ஆரிருட் |
கொங்கியர் ஈன்ற மைந்தின் |
வெஞ்சின உழுவை திரிதரும் காடே |
(நச்-மேற்) |
என்பது வழியிடத்துள்ள ஏதமஞ்சியது. |
"வல்வில் இளையரொடு எல்லிச் செல்லாது |
சேந்தனை செலினே சிதைகுவது உண்டோ |
பெண்ணை ஓங்கிய வெண்மணற் படப்பை |
அன்றில் அகவும் ஆங்கண் |
சிறுகுரல் நெய்தல் எம்பெருங்கழி நாட்டே" |
(அக-120) |
என்பது பகற்குறி கூறியது. |
"இரவின் வாரல் ஐய விரவுவீ |
அகலறை வரிக்கும் சாரல்" |
(கலி-49) |
என்பது இரவின்கண் வாரற்க என்றது. |
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து |
இயல்முருகு ஒப்பினை வயநாய் பிற்பட |
பகல்வரின் கௌவை யஞ்சுதும்" |
(அக-118) |
என்பது பகலின்கண் வாரற்க என்றது. |
யாயே கண்ணினும் கடுங் காதலளே |
எந்தையும் நிலனுறப் பொறாஅன் |
..... ...... ...... ...... ...... ....... ....... ....... ...... ....... ....... |
நல்வரை தாட நீவரின் |
மெல்லியல் ஓரும் தான்வா ழலளே |
(அக-12) |
என்பது இரவினும் பகலினும் வாரற்க என்றது. |
| | "கூனல் எண்கின்" என்னும் அகப்பாட்டினுள் | (112) |
| நாள்இடைப் படின்என் தோழி வாழாள் | |
| தோளிடை முயக்கம் நீயும் வெய்யை | |