மடத்தான் ஏற்படும் மருட்கையைத் தனித்து எண்ணுவதும் போல்வனவற்றின்
பொருத்தம் ஆராய்தற்குரியது.
 

243.   சுட்டு   என்பதன்     விளக்கம்   வலிந்து   எடுத்துக்காட்டில்
பொருத்தப்பட்டுள்ளது. நகை, சிறப்பு என்பனவும்   அன்ன,  உடனுறையும்
உவமமும் சுட்டு, நகை, சிறப்பு என்ற   முத்திறங்களை   அடிப்படையாகக்
கொண்டு வரும் என்பதே   ஆசிரியர்  கருத்துப் போலும்.  பின்னர் ஐந்து
என்று   தொகை  கூறியது   என்னை   எனின்? இருபெயர், பலபெயருள்
அடங்கும்    அளவின்   பெயர்,   எண்ணியற்   பெயர்,   நிறைப்பெயர், எண்ணின்பெயர்   என்பனவற்றையும்    தொகுத்து   உம்மைத்தொகையை
அறுவகையாகக்   கூறியதுபோற் கொள்ளலாம்.   எனவே   உள்ளுறைகள்
இறைச்சி - உள்ளுறை உவமம் என்ற இரண்டே என்று  கோடல் தெளிவும்,
எளிமையும் தருவதாம். உள்ளுறை   இறைச்சி   என்ற   இரண்டனையுமே
விளக்கிய   ஆசிரியர்  சுட்டு,  நகை,   சிறப்பு   என்பனவற்றை   வாளா
பெயரளவில் சுட்டிச் சென்றமையும் உளங் கொளத்தக்கது.12
 

244. இன்பந்தன்வயின் - இத்தகைய தொடரமைப்பு, தொல்காப்பியத்துள்
வந்துள்ளதா? என்று ஆராய்தற்குரியது.  இதற்கு   நச்சினார்க்கினியர் உரை நயமாக உள்ளது.
 

247. திருமணம்  ஆதற்கு   முன்னும்   தலைவி, தலைவனை என்னை
என்கிறாள். என்  தலைவன் என்பதே   ஆண்டும்   பொருள்.   எடுத்துக்
காட்டுப் பாடலில் என்னை என்பது என் தலைவன் என்ற பொருளிலேயே
வந்துள்ளது. தந்தை, தமையன் என்ற   பொருளில்   வந்திலது.   என்னை
என்பது   என்     தலைவன்      என்ற      பொருளிலேயேயாண்டும்
வருதலின்-புறப்பொருள்   மேற்கோள்  காட்டுதற்   கண்ணும்  குறையின்று
என்று தோன்றுகின்றது. தலைவன் என்ற   பெருந்தலைப்பினுள்   காதலன்
என்பதும் அடங்கும்.
 

248. நூற்பாக்கருத்தும் சொற்பொருள் விளக்கமும் தெளிவாக உள்ளன.
 

249. கருத்தும் உரை விளக்கமும் நுணுக்கமாக உள்ளன.
 

சுருங்கச்சொல்லின்   பாவலர்     பாலசுந்தரனாரின்   இவ்வியல்களின்
ஆராய்ச்சிக் காண்டிகையுரை பல நூற்பாக்களுக்குத் தெளிவான   கருத்தும்
விளக்கமும் தந்து அகப்பொருள் மரபினைத்  தெளிவாக உணரப்  பெரிதும்
உதவுகிறது. ஆசிரியருடைய
 


12. சுட்டு  நகை  சிறப்பு   என்னும்   உள்ளுறை   பற்றிய   இலக்கண
நூற்பாக்கள்   மறைந்தனவாகலாம்.   செய்யுட்குப்    பல்லாற்றானும்
காணப்படும் நம் உரை விளக்கங்கள்  இம்மூன்றன்   பாற்படுவனவே
என்பது என் கருத்து.