| ஈரஞ் சேரா இயல்பிற் பொய்ம்மொழிச் |
| சேரியம் பெண்டிர் கௌவையும் ஒழிதும் |
| நாடுகண் அகற்றிய உதியஞ் சேரற் |
| பாடிச் சென்ற பரிசிலர் போல |
| உவவினி வாழி தோழி அவரே |
| பொம்மல் ஓதி நம்மொடு ஓராங்குச் |
| செலவயர்ந் தனரால் இன்றே" |
(அக-65) |
என்பது உடன்போக்கிற்கு உடன்பட்டமை கூறிற்று. |
| "ஊர்அலர் எழச் சேரிக்'கல்'லென |
| ஆனாது அலைக்கும் அறனில் அன்னை |
| தானே இருக்க தன்மனை, யானே |
| நெல்லிதின்ற முள்ளெயிறு தயங்க |
| உணல் ஆய்ந்திசினால் அவரொடு" |
என்பது இடையூறு பொருளின்கட் போக்குடன் பட்டமை கூறிற்று. |
| ஒறுப்ப ஓவலர் மறுப்பத் தேறலர் |
| தமியர் உறங்குங் கௌவை யின்றாய் |
| இனியது கேட்டின் புறகவிவ் வூரே |
| முனாதுயானையங் குருகின் கானலம் பெருந்தோடு |
| அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம் |
| குட்டுவன் மாந்தை யன்னஎம் |
| குழல்விளங் காய்நுதற் கிழவனும் அவனே |
(குறு-34) |
இஃது உடன் சென்று வரையக் கருதுதல் கூறிற்று. |
| சூ. 227 : | வருத்த மிகுதி சுட்டுங் காலை |
| உரித்தென மொழிப வாழ்க்கையுள் இரக்கம் |
(31) |
க - து : | இருவகைக் கைகோளினும் தலைமக்கட்குரியதொரு பொருண்மை கூறுகின்றது. |
பொருள்: களவின்கண் கூட்டத்திற்கு இடையூறாக அமையும் இற்செறிப்புத் தலைவன் வருந்தொழிற்கருமை, அல்லகுறி முதலியவற்றானும், கற்பின்கண் பரத்தையிற்பிரிவு, உணர்த்த உணரா ஊடல் முதலியவற்றானும் எய்தும் வருத்தம் கைகடந்து போதலைக் கருதுமிடத்து உயிரொடு வாழும் வாழ்க்கையின்கண் அவலமுற்றுக் கூறும் கூற்றுத் தலைமக்கட்கு உரித்தெனக் கூறுவர் நூலோர். |
| எ - டு : | தொய்யில் துறந்தார் அவர்எனத் தம்வயின் |
| நொய்யார் நுவலும் பழிநிற்பத் தம்மொடு |
| யோயின்று சொல்என் உயிர் |
| (கலி-24) |