சூ. 230 : | இறைச்சி தானே உரிப்புறத் ததுவே |
(34) |
க - து : | அகத்திணை மாந்தர் கூற்றினுள் உள்ளுறைப்பொருள் பயப்பனவாகப் பின்னர் ஓதப்பெறும் ஐந்தனுள் 'உடனுறை' எனப்படும் இறைச்சியினது இலக்கணங் கூறுகின்றது. |
பொருள் :நிலத்துவழி மருங்கிற் றோன்றும் (பெய - 42) அஃறிணைப் பொருள்களைப் பற்றிவரும் இறைச்சி என்னும் உள்ளுறையாவது மக்கள் நுதலிய அகனைந்திணை ஒழுகலாறாகிய உரிப்பொருளின் புறத்ததாகும். |
என்றது : இறைச்சியாவது மக்களும் தெய்வமுமல்லாத ஏனைய கருப்பொருள்களின் செயலும் பண்புமாகிய நடக்கை பற்றி வரும் என்றவாறு. |
பெயரியலுள் இயற்பெயர் பற்றிய இலக்கணமரபுகளைக் கூறுமிடத்து இயைபும் விளக்கமும் கருதி ஆசிரியர், |
''இறைச்சிப் பொருள்வயின் செய்யுளுட் கிளக்கும் |
இயற்பெயர்க் கிளவி உயர்திணை சுட்டா |
நிலத்துவழி மருங்கிற் றோன்ற லான'' |
| (பெய-42) |