எனக் கூறினார். ஏனை உவமப்போலியை உவமவியலுடன் கூறினார். அந்நெறியே பற்றி உள்ளுறை வகை ஐந்தும் இசை திரிந்திசைப்பனவாகலின் அவற்றை இவ்வியலுட் சுட்டி ஓதுவாராயினார் என அறிக. |
இனி "உரிப்புறத்ததுவே" என்பதற்குக் கருப்பொருள் எனப் பொருள் கொண்டால் என்னை எனின்? இறைச்சி என்னும் தொழிற்பெயர் அங்ஙனம் உரைகோடற் கியையாதாகலின் கூடாதென்க. |
இறைச்சி என்பது கருப்பொருள்களின் பண்பும், செயல்களும் ஆகிய நடக்கைகளே என்பதனை, |
ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும் |
(கற்-29) |
எனவும் |
புணர்ந்துடன் போகிய கிழவோள் மனையிருந்து |
இடைச்சுரத்து இறைச்சியும் வினையும் சுட்டி |
(நற்-7) |
அன்புறு தகுந இறைச்சியும் சுட்டலும் |
(பொரு-36) |
எனவும் |
ஆசிரியர் ஓதுதலான் அறிக. "ஆற்றிடைக் கண்ட பொருள் " என்றது கருப்பொருள்களை. "இறைச்சி" என்றது அவற்றின் நடக்கைகளை. 'இடைச்சுரத்து இறைச்சி" என்றது கருப்பொருள்களின் நடக்கைகளை. 'வினை' என்றது தலைவன் செய்த தண்ணணி முதலியவற்றை என்பது அச்சூத்திர உரைகளுள் கண்டுகொள்க. மேலும் |
வீழுநர்க் கிறைச்சியாய் விரல்கவர் பிசைக்குங்கோல் |
ஏழுந்தன் பயன்கெட இடைநின்ற நரம்பறூஉம் |
யாழினும் நிலையில்லாப் பொருளையும் நச்சுபவோ |
(கலி-7) |
இன்புற்றார்க் கிறைச்சியாய் இயைவதே செய்தாய்மன் |
அன்புற்றார் அழநீத்த அல்லலுட் கலங்கிய |
துன்புற்றார்த் துயர்செய்தல் தக்கதோ நினக்கு |
(கலி-184.31) |
எனவரும் நல்லிசைப் புலவோர் செய்யுட்கண் இச்சொல் கருப்பொருளின் செயற்பாடு குறித்தே நிற்றலைத் தேர்ந்து கொள்க. |
இச் சூத்திரத்தான் இறைச்சியின் இலக்கணங் கூறினார். இறைச்சியுள் ஒரோவழி உள்ளுறைப்பொருள் பிறக்குமாற்றை வரும் சூத்திரத்தாற் கூறுப. |