ஏத்துதல் தலைவனது குறிப்பினை உணரும் பயத்தாக நிற்கும் என்க. இஃது வரும் சூத்திரத்தானும் விளங்கும். |
| எ - டு : | நாயுடை முதுநீர் கலித்த தாமரைத் |
| தாதின் அல்லி அவிர்இதழ் புரையும் |
| மாசில் அங்கை மணிமருள் செவ்வாய் |
| நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல் |
| யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத் |
| தேர்வழங்கு தெருவில் தமியோற் கண்டே |
| கூர்எயிற் றரிவை குறுகினள் யாவரும் |
| காணுநர் இன்மையின் செத்தனள் பேணி |
| வருகமாள என்உயிர் எனப்பெரிது வந்து |
| கொண்டனள் நின்றோள் கண்டுநிலைச் செல்லேன் |
| மாசில் குறுமகள் ! எவன்பே துற்றனை |
| நீயும் தாயை இவற்கென யான்தற் |
| கரைய வந்து விரைவனென் கவைஇ |
| களவுடம் படுநரிற் கவிழ்ந்துநிலங் கிளையா |
| நாணி நின்றோள் நிலைகண்டு யானும் |
| பேணினென் அல்லனோ மகிழ்ந வானத்து |
| அணங்கருங் கடவுள் அன்னோள்நின் |
| மகன் தாயாதல் புரைவதாங் கெனவே |
(அக-16) |
எனத் தலைவி பரத்தையை ஏத்தினமையும், நீயும் தாயை இவற்கு எனவும், மகன் தாயாதல் புரைவது எனவும் கூறினமையான் உள்ளத்து ஊடல் அமைந்துள்ளமையும் கண்டு கொள்க. |
| சூ. 235 : | கிளவோள் பிறள்குணம் இவையெனக் கூறிக் |
| கிழவோன் குறிப்பினை உணர்தற்கும் உரியள் |
(39) |
க - து : | தலைவி கூற்றின்கண் அமையுமொரு திறன் கூறுகின்றது. |
பொருள் : தலைவி பிறள் ஒருத்தியின் குணங்கள் இத்தன்மையன எனக் கூறுமுகத்தான் அவள்மாட்டுத் தலைவன் கொண்டுள்ள உளக்குறிப்பினை அறிதற்கும் உரியளாவாள். |
பரத்தையை ஏத்துதலேயன்றிப் அவள் குணத்தைக் கூறித் தலைவன் குறிப்பினை உணரும் என நின்றமையின் உம்மை எச்சவும்மை இதனான் பரத்தையை ஏத்துதலும் தலைவன் குறிப்பினை உணரும் பயத்ததாதல் விளங்கும். |
| எ - டு : | கண்டனெம் அல்லமோ மகிழ்நநின் பெண்டே |
| பலராடு பெருந்துறை மலரொடு வந்த |