க - து : | தலைவன் குறித்துச் சென்ற பருவம் கழிந்தகாலைத் தலைவி கையற்றுக் கூறுதற்கு ஏதுவாமாறு கூறுகின்றது. |
பொருள் : தலைவனது பிரிவாற்றாமையான் தலைவி செயலற்றுத் துயர்கூர்ந்து, வினைவயிற் பிரிந்த தலைவன் தான் மீண்டும் வருவதாகக் குறித்த பருவம் கழிந்தன போலக் கலங்கிக் கூறும் கூற்றுக்கள், மடனும், வருத்தமும், மருட்கையும், மிகுதியுமாகிய அந்நான்கு பொருட்கண்ணும் நிகழும் எனக் கூறுவர் நூலோர். |
'தலைவைத்த பொழுது' எனமாறுக. வற்புறுத்தி உறுதி கூறியபொழுதாகலின் 'தலைவைத்த பொழுது' என்றார். |
மடன் = ஆராய்தலின்றி நிகழும் அறியாமை. வருத்தம் = பிரிவாற்றாமையான் வரும் துயரம். மருட்கை = ஒன்றைப் பிறிதொன்றாகக் கருதும் மயக்கம். மிகுதி = அப்பருவகாலத்திற்குரிய பொருள் மிக்கனவாகத் தோன்றுதல். |
| எ - டு : | கடும்புனல் தொடுத்த நடுங்கஞர் அள்ளல் |
| கவிர்இதழ் அன்ன தூவிச் செவ்வாய் |
| இரைதேர் நாரைக்கு எவ்வ மாகத் |
| தூவும் துவலைத் துயர்கூர் வாடையும் |
| வாரார் போல்வர் நம்காதலர் |
| வாழேன் போல்வல் தோழி யானே |
(குறு-103) |
இது பருவத்தின் தொடக்கமெனக் கருதாமல் முற்றீற்றாக எண்ணிய மடம்பற்றி வந்தது. |
| வாரார் ஆயினும் வரினும் அவர்நமக்கு |
| யாரா கியரோ தோழி நீர |
| நீலப் பைம்போது உளரிப் புதல |
| பீலி ஒண்பொறிக் கருவிளை ஆட்டி |
| நுண்முள் ஈங்கைச் செவ்வரும்பு ஊழ்த்த |
| வண்ணத் துய்ம்மலர் உதிரத் தண்ணென்று |
| இன்னாது எறிதரும் வாடையொடு |
| என்ஆயி னள்கொல் என்னா தோரே |
(குறு-110) |
இது வருத்த மிகுதியாற் கூறியது. |
| இளமை பாரார் வளம்நசைஇச் சென்றோர் |
| இவணும் வாரார் எவண ரோஎனப் |
| பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லை |
| தொகுமுகை இலங்கெயி றாக |
| நகுமே தோழி நறுந்தண் காரே |
| (குறு-126) |