பொருளியல்241
எ - டு :

பால்மருள் மருப்பின்' என்னும் பாலைக்கலியுள் 

"பொருள்வயிற் பிரிதல் வேண்டும் என்னும்

அருளில் சொல்லும் நீசொல் லினையே

நன்னர் நறுநுதல் நயந்தனை நீவி

நின்னிற் பிரியலென் அஞ்சல் ஓம்புஎன்னும்

நன்னர் மொழியும் நீமொழிந் தனையே 

அவற்றுள் யாவோ வாயின - மால்மகனே

கிழவோர் இன்னோர் என்னாது பொருள்தான்

பழவினை மருங்கின் பெயர்புபெயர்பு உறையும்

அன்ன பொருள்வயிற் பிரிவோய்"

(21)
 

என உரனொடு இடித்துக் கூறியவாறு கண்டுகொள்க.
 

சூ. 241 :

உயர்மொழிக் கிளவியும் உரியவா லவட்கே
(45)
 

க - து :

இதுவும் அது
 

பொருள் : உறுகண்  ஓம்புதலேயன்றித் தலைவனையும் தலைவியையும்
உயர்த்துக் கூறும் கிளவியும் தோழிக்குரியதாக வரும்.
 

"தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை

நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின்

மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறூஉம்

அணங்கென அஞ்சுவர் சிறுகுடி யோரே"

(கலி-52)
 

இது தலைவனை உயர்த்துக் கூறியது.
 

யாயா கியளே விழவுமுத லாட்டி

பயறுபோல் இணர பைந்தாது படீஇயர்

உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்

காஞ்சி ஊரன் கொடுமை

கரந்தனள் ஆகலின் நாணிய வருமே

(குறு-10)
 

இது தலைவியை உயர்த்துக் கூறியது.
 

பொதுப்படக் கூறியதனான் தாயரை உயர்த்துக் கூறுதலும் கொள்க.
 

சூ. 242 :

வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்தல்

தாவின் றுரிய தத்தங் கூற்றே

(46)
 

க - து :

வாயில்கட்குரிய கூற்றுப் பற்றியதொரு மரபு கூறுகின்றது.