242பொருளியல்

பொருள் : பாணர்  முதலாய  வாயில்கள்  தத்தமக்குரிய  நெறியானே
வாயிலாகக்    கூறும்     கூற்றுக்கள்    வெளிப்படையாகக்    கூறுதற்கு
வருத்தமின்றியுரியதாகும்.
 

அஃதாவது   வாயிலோர்  கூற்றுக்,  கேட்போர்க்கு   வருத்தம்  தரும்
இயல்பினவாயினும்,   குற்றேவல்   மரபினராகலின்   குறிப்பாற்   கூறுதல்
சாலாமையான்   வெளிப்படையாகவே   கூறுவர்   என்பதும்   அக்கூற்று
வருந்துதற்குரியதன்று என்பதும் உணர்த்தியவாறு.
 

எ - டு :

நினக்குயாம் பாணரேம் அல்லேம் எமக்கு

நீயும் குருசிலை யல்லை மாதோ

நின்வெங் காதலி தன்மனைப் புலம்பி

ஈரிதழ் உண்கண் உகுத்த

பூசல் கேட்டும் அருளா தோயே

(ஐங்-480)
 

எனவரும். பிறவாயில்களின் கூற்றுக்களையும் இவ்வாறே கண்டு கொள்க.
 

சூ. 243 :

உடனுறை உவமம் சுட்டுநகை சிறப்பெனக்

கெடலரும் மரபின் உள்ளுறை ஐந்தே

(47)
 

க - து : 

அகத்திணை மாந்தர் தாம்  கூறும்  கூற்றுக்களுள்  மறைத்துப் 
பேசும்   உள்ளுறை   மொழிகளின்   வகையும்   தொகையும்
கூறுகின்றது.
 

பொருள் : இருவகைக்   கைகோளும்  பற்றி   ஒழுகும்  அகத்திணை
மாந்தர்தாம்    கருதும்    கருத்தினை    வெளிப்படையாகக்    கூறாமல்
ஒன்றனைச் சார்த்தி  மறைத்து  உள்ளுறையாகக் கூறுமிடத்து அவர் கருதிய
பொருளைத்  திரிபின்றித்  தோற்றுவிக்கும்  மரபினையுடைய  உள்ளுறைக்
கிளவிகள் உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பு என ஐந்தாகும்.
 

உவமப்போலி பற்றிப் பின்னர் உவமவியலுள்
 

"முன்ன மரபிற் கூறுங் காலைத்

துணிவொடு வரூஉம் துணிவினோர் கொளினே"

(உவ-23)
 
எனக் கூறுவார்.
 

அவ்வாறன்றி  இவை  திரிபின்றிப்  பொருளைப்  புலப்படுத்துமென்பார்
"கெடலரு  மரபின்  உள்ளுறை"  என்றார்.  என   என்னும்  இடைச்சொல்
எண்ணுப் பொருளில் வந்தது. ஏகாரம் தேற்றம்.
 

1) உடனுறையாவது :  இறைச்சியிற்   பிறக்கும்   பொருளுமாருளவே
(பொரு-34) என ஓதிய  இறைச்சியிற்  பிறக்கும்  உள்ளுறைப்  பொருளாம்.
இவ் உள்ளுறை கருப்பொருளின்