பொருள் : பாணர் முதலாய வாயில்கள் தத்தமக்குரிய நெறியானே வாயிலாகக் கூறும் கூற்றுக்கள் வெளிப்படையாகக் கூறுதற்கு வருத்தமின்றியுரியதாகும். |
அஃதாவது வாயிலோர் கூற்றுக், கேட்போர்க்கு வருத்தம் தரும் இயல்பினவாயினும், குற்றேவல் மரபினராகலின் குறிப்பாற் கூறுதல் சாலாமையான் வெளிப்படையாகவே கூறுவர் என்பதும் அக்கூற்று வருந்துதற்குரியதன்று என்பதும் உணர்த்தியவாறு. |
| எ - டு : | நினக்குயாம் பாணரேம் அல்லேம் எமக்கு |
| நீயும் குருசிலை யல்லை மாதோ |
| நின்வெங் காதலி தன்மனைப் புலம்பி |
| ஈரிதழ் உண்கண் உகுத்த |
| பூசல் கேட்டும் அருளா தோயே |
(ஐங்-480) |
எனவரும். பிறவாயில்களின் கூற்றுக்களையும் இவ்வாறே கண்டு கொள்க. |
| சூ. 243 : | உடனுறை உவமம் சுட்டுநகை சிறப்பெனக் |
| கெடலரும் மரபின் உள்ளுறை ஐந்தே |
(47) |
க - து : | அகத்திணை மாந்தர் தாம் கூறும் கூற்றுக்களுள் மறைத்துப் |
| பேசும் உள்ளுறை மொழிகளின் வகையும் தொகையும் கூறுகின்றது. |
பொருள் : இருவகைக் கைகோளும் பற்றி ஒழுகும் அகத்திணை மாந்தர்தாம் கருதும் கருத்தினை வெளிப்படையாகக் கூறாமல் ஒன்றனைச் சார்த்தி மறைத்து உள்ளுறையாகக் கூறுமிடத்து அவர் கருதிய பொருளைத் திரிபின்றித் தோற்றுவிக்கும் மரபினையுடைய உள்ளுறைக் கிளவிகள் உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பு என ஐந்தாகும். |
உவமப்போலி பற்றிப் பின்னர் உவமவியலுள் |
"முன்ன மரபிற் கூறுங் காலைத் |
துணிவொடு வரூஉம் துணிவினோர் கொளினே" |
(உவ-23) |
எனக் கூறுவார். |
அவ்வாறன்றி இவை திரிபின்றிப் பொருளைப் புலப்படுத்துமென்பார் "கெடலரு மரபின் உள்ளுறை" என்றார். என என்னும் இடைச்சொல் எண்ணுப் பொருளில் வந்தது. ஏகாரம் தேற்றம். |
1) உடனுறையாவது : இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே (பொரு-34) என ஓதிய இறைச்சியிற் பிறக்கும் உள்ளுறைப் பொருளாம். இவ் உள்ளுறை கருப்பொருளின் |