244பொருளியல்

இத்தலைவி  கூற்றுச்  சுட்டாக  அமைந்து  மேற்கூறிய உள்ளுறையைப்
புலப்படுத்தலை.
 

"இடியுமிழ்பு இரங்கிய விரவுப்பெயல் நடுநாள்

கொடிவிடுபு இருளிய மின்னுச்செய் விளக்கத்து

...... ........ ........ ........ ........ ....... ........ ......... ..

பலவின் பழத்துள் தங்கும் மலைகெழு வெற்பனைப்

பாடுகம் வாவாழி தோழி நற்றோழி பாடுற்று"
 

என்பதன்கண்  அமைந்துள்ள  உள்ளுறை  உவமத்தின்  பொருட் சார்பான்
தெரிந்து கொள்க.
 

இங்ஙனம்  தலைவி  கூறியவழி  அதனைக்  கேட்டதோழி  தலைவனை
இயற்பழித்து   அவன்   கொடுமை   கூற    நினைவாளாதலின்   தோழி
இயற்பழித்துக் கூறாமுன் தானே
 

"இலங்கும் அருவித்தே இலங்கும் அருவித்தே

வானின் இலங்கும் அருவித்தே தானுற்ற

சூள்பேணான் பொய்த்தான் மலை" என்றாள் என்க.
 

இத்தாழிசைப்  பகுதியும்  சுட்டு  என்னும்  உள்ளுறைப்பொருள்  அமைந்த
கூற்றேயாகும். இதன்கண் அமைந்துள்ள கருத்தாவது :
 

பிரிவாற்றாமையான் தலைவன்  சூள்பொய்த்தான்  எனக்  கூறியதல்லது
அவன் அறநெறிசான்ற பொருமையனே எனத் தோழிக்கு  உணர்த்துதலாம்.
இதுவே  தலைவி  கருத்து  என்பனைத்  தோழி  உணர்ந்து  கொண்டாள்
என்பதைப்,
 

"பொய்த்தற் குரியனோ பொய்த்தற் குரியனோ

அஞ்சலோம்பு என்றாரைப் பொய்த்தற் குரியனோ

குன்றகல் நன்னாடன் வாய்மையிற் பொய்தோன்றின்

திங்களுள் தீத்தோன் றியற்று"           என்றும்

"வாரா தமைவானோ - நீருள் குவளை வெந்தற்று"என்றும்

"துறக்குவன் அல்லன் - இருள் தோன்றியற்று" என்றும்
 

தோழி தலைவனை  ஏத்திக்  கூறியதனான்  அறிந்து  கொள்க.  பின்னர்த்
தோழியின்  முயற்சியான்   வரைவு   நேர்ந்தமையையும்   அச்செய்யுளின்
சுரிதகத்தான் தெரிந்து கொள்க.
 

இவ் உள்ளுறை, கருப்பொருள்களின் செயலே  பற்றிப்  பிறவாமையான்
உடனுறையாகாமையும்    பொருளெதிர்    புணர்த்து    உவமங்கோடற்கு
ஏலாமையான் உள்ளுறைஉவமம் ஆகாமையும் கண்டு கொள்க.