4. ஆக்கமாவது : ஒன்றினின்று ஆதற்கியலாத ஒன்று ஆதலும் ஒன்று பிறிதொன்றாகத் திரிதலுமாம். |
| எ - டு : | புலப்ப லெனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் |
| கலத்த லுறுவது கண்டு |
(குறள்-1259) |
புலவி கலவியாகத் திரிந்த தென்றலின் இது தன்கட்டோன்றிய ஆக்கம் பற்றிப் பிறந்த மருட்கையாம். |
| அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் |
| அடிக்கு நெருஞ்சிப் பழம் |
(குறள்-1120) |
தனக்கு மென்மையாயவை தலைவிக்கு வன்மையாயின என்றலின் பிறர்கட்டோன்றிய ஆக்கம் பற்றிவந்த மருட்கை. இனிப் பேராசிரியர், |
| "எருமை யன்ன கருங்கல் லிடைதோ |
| றானிற் பரக்கும் யானைய முன்பிற் |
| கானக நாடனை நீயோ பெரும |
(புறம்-5) |
என்றது. |
நரிவெரூஉத்தலையார் சாபம் நீங்கி நல்லுடம்பு பெற்றமையான் தன்கண் தோன்றிய ஆக்கம்பற்றி வியப்புப் பிறந்ததென்பார். நல்லுடம்பு பெற்ற நிகழ்ச்சி அச்செய்யுட்கண் அமையாமையான் அது பொருந்துமாறில்லை என்க. |
| உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி |
| இறப்ப நிழற்பயந் தாங்கு |
(நாலடி - 38) |
என்பதனைப் பிறபொருளாக்கம்பற்றிப் பிறந்த வியப்பிற்கு எடுத்துக்காட்டுவார் அவர். அஃது இயற்கை யாதலன்றி ஆக்கமாகாமையறிக. |
இனி "மதிமை சாலா மருட்கை" என்றமையான் சிறியோர் பெருஞ்செயல்புரிதலும் பெரியோர் சிறுசெயல்புரிதலும் வியப்பின் பாற்படுத்து அடக்கிக் கொள்க. |
| எ - டு : | "கிண்கிணி களைந்த கால்" என்னும் புறப்பாட்டு |
| (புறம்-77) சிறியோன் பெருஞ்செயல் செய்ததாம். |
| அன்னான் ஒருவன்தன் ஆண்டகை விட்டென்னைச் |
| சொல்லுஞ் சொற்கேட்டி சுடரிழாய் |
(கலி-47) |
என்பது பெரியோன் சிறுசெயல் புரிந்ததாம், பிறவும் இவ்வாறு வருவனவற்றை ஓர்ந்து கொள்க. |
| சூ. 257 : | அணங்கே விலங்கே கள்வர்தம் மிறையெனப் |
| பிணங்கல் சாலா அச்சம் நான்கே |
(8) |
க - து : | அணங்கு முதலாய நான்கும் பற்றி அச்சம் பிறக்கும் என்கின்றது. |