செல்வம் முதலிய நான்கும் அறத்தொடு கூடி வாராவிடத்துத் தனக்கும் பிறர்க்கும் அவை வருத்தமும் செய்வனவாதலின் "அல்லல் நீத்த" எனச் சிறப்பித்துக் கூறினார் என்க. |
1. செல்வமாவது :பொருட் செல்வமேயன்றி அறுசுவை உண்டி முதலிய நுகர்பொருளும், ஆடையணி முதலாய துய்த்தற் பொருளும், கொடியும் படையும் முதலிய அரசச் செல்வமுமாம். |
| எ - டு : | வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும் |
| எல்லார்க்கும் கொடுமதி மனைகிழ வோயே |
| பழந்தூங்கு முதிரத்துக் கிழவன் |
| திருந்துவேற் குமணன் நல்கிய வளனே. |
(புறம்-163) |
எனவும் ....... ...... .......... ........ .......... ......... ........ இரவல |
| வென்வே லண்ணற் காணா வூங்கே |
| நின்னினும் புல்லியேம் மன்னே, இனியே |
| இனன் மாயினேம் .... .... ..... ..... |
(புறம்-141) |
எனவும் வரும். இது தன்கண்ணதாய் நிகழவரும். |
2. புலனாவது :ஊழான் அமைந்த தன்னுணர்வான் எய்தும் உண்மையறிவாகிய புலமைப் பேறு. |
| எ - டு : | வழிபடு வோரை வல்லறி தீயே |
| பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே |
| நீமெய் கண்ட தீமை காணின் |
| ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி |
| வந்தடி பொருந்தி முந்தை நிற்பின் |
| தண்டமும் தணிதிநீ பண்டையிற் பெரிதே |
(புறம்-10) |
| இகலிலர் எஃகுடையார் தம்முட் குழீஇ |
| நகலின் இனிதாயிற் காண்பாம் - அகல்வானத்து |
| உம்பர் உறைவார் பதி |
(நாலடி-137) |
எனவரும். இஃது இருபாலும் பற்றிவரும். |
3. புணர்வாவது :ஒன்றியுயர்ந்த பாலதாணையாற் பொருந்திய தலைவனும் தலைவியும் எய்தும் உள்ளப் புணர்ச்சியும், மெய்யுறு புணர்ச்சியுமாம். "அல்லல் நீத்த" என்றதனான் உயிரோரன்ன நட்பிற் புணர்ச்சியுமாம் எனக் கொள்க. |
| எ - டு : | தம்மில் லிருந்து தமதுபாத் துண்டற்றால் |
| அம்மா அரிவை முயக்கு |
(குறள்-1107) |
எனவரும். |
| "விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்" |
| என்னும் குறுந்தொகைச் செய்யுளும் அது. |