| நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் |
| பண்புடை யாளர் தொடர்பு |
(குறள்-783) |
எனவும் வரும். இது தன்கண் தோன்றிய பொருள்பற்றி வரும். |
4. விளையாட்டாவது : உள்ள மொத்தாரொடு கூடிச் சோலைபுக்கு விளையாடலும், குரவை முதலிய ஆடலும், இகலின்றிப் புரியும் வீர விளையாட்டுமாம். |
| எ - டு : | மேவர, நான்மாடக்கூடல், மகளிரும் மைந்தரும் |
| தேனிமிர் காவிற் புணர்ந்திருந் தாடுமார் |
| ஆனா விருப்பொடு அணியயர்ப, காமற்கு |
| வேனில் விருத்தெதிர் கொண்டு |
(கலி-92) |
எனவும் |
| வையை வருபுனல் ஆட லினிதுகொல் |
| செவ்வேற்கோ குன்றம் நுகர்தல் இனிதுகொல் |
(பரிபாடல் திரட்டு) |
எனவும் வரும். |
| துயிலின்றி யாம்நீந்த தொழுநையம் புனலாடி |
| மயிலியலார் மருவுண்டு மறந்தமைகுவான் மன்னோ |
(கலி. 30) |
என்பது காட்டுவார் பேராசிரியர். இன்னோரன்ன அல்லல் நீத்த உவகை எனற் கேலாமை கண்டு கொள்க. |
இம்முப்பத்திரண்டு பொருளும் நாடகச் சுவைக்கும் உரிமையுடையனவாய் நகை முதலாய எண்வகை மெய்ப்பாடுகட்குச் சிறப்புடையனவாய் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாய் அமைந்து வருதலின் இவற்றை முதற்கண்விதந்தோதினார் என்க. |
| சூ. 261 : | ஆங்கவை ஒருபா லாக ஒருபால் |
| உடைமை இன்புறல் நடுவுநிலை யருளல் |
| தன்மை அடக்கம் வரைதல் அன்பெனாக் |
| கைம்மிகல் நலிதல் சூழ்ச்சி வாழ்த்தல் |
| நாணுதல் துஞ்சல் அரற்றுக் கனவெனா |
| முனிதல் நினைதல் வெரூஉதல் மடிமை |
| கருதல் ஆராய்ச்சி விரைவுயிர்ப் பெனாஅக் |
| கையா றிடுக்கண் பொச்சாப்புப் பொறாமை |
| வியர்த்தல் ஐயம் மிகைநடுக் கெனாஅ |
| அவையும் உளவே அவையலங் கடையே |
(12) |
க - து : | அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாக வரும். மேற்கூறிய முப்பத்திரண்டு பொருள்களேயன்றி அவையல்லாதவிடத்து எண்வகை மெய்ப்பாட்டிற்குரிய பொருளாக இவையுமுள என்கின்றது. |