பொருள் :எண்வகை மெய்ப்பாடுகட்கும் அடிப்படையாக எள்ளல் முதலிய முப்பத்திரண்டு பொருளும் ஒரு பகுப்பாகி அமைய அவையல்லாதவிடத்துப் பிறிதொரு பகுப்பாக உடைமை, இன்புறல் முதலியனவாக வரும் இவை முப்பத்திரண்டும் பொருளாதற்கு உளவாகும். |
இவை, உடைமையின்புறல், நடுவுநிலையருளல் என்றாற் போல ஒருங்கு எண்ணுதற்கு ஏற்ப நிற்றலான் இவற்றை முப்பத்திரண்டாக எண்ணிக் கோடல் வேண்டுமென உணர்ந்த ஆங்கவை ஒருபாலாக (ஈங்கிவை) ஒருபால் எனக்கூறினார் ஆசிரியர் என்க. |
அவையும் என்னும் எச்சவும்மை அவற்றின் சிறப்பின்மை தோன்ற நின்றது. உயிர்ப்பெனாஅ, நடுக்கெனாஅ என்பவை செய்யுளிசை நிறைக்க வந்த அளபெடை. எனா என்பவை எண்ணின்கண் வந்தன. |
1. உடைமையாவது : மேற்கூறிய துய்க்கப்படும் செல்வத்தின் வேறுபட்டுப் பிறவாக வரும் கிழமைப் பொருள்களாம். |
| எ - டு : | நெடுநல் யானையும் தேரும் மாவும் |
| படையமை மறவரும் உடையம்யாம் |
(புற-72) |
எனவரும். |
| மயக்ககுறு மக்களை இல்லோர்க்குப் |
| பயக்குறை இல்லைத்தாம் வாழும் நாளே |
(புற-188) |
என்பதுமது. இவற்றைச் செல்வமாகக் கருதிய வழி உவகைக்குரிய பொருளாக அமையும். |
இஃது உவகை என்னும் மெய்ப்பாட்டிற்குப் பொருளாக அமையும். ஈண்டு இம்முப்பத்திரண்டு பொருள்கட்கும் மெய்ப்பாட்டுரிமை கூறுதல் பெரும்பான்மை பற்றி என உணர்க. சிறுபான்மை வேறுபடவரினும் ஆராய்ந்து கொள்க. |
2. இன்புறலாவது :தமது உடைமைகளையும் செயல்களையும் பற்றித் தாமே எண்ணி மகிழ்தல். |
| எ - டு : | குழலினிது யாழினிது என்பதம் மக்கள் |
| மழலைச்சொற் கேளா தவர் |
(குறள்-66) |
| ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை |
| வைத்திழக்கும் வன்கண் ணவர் |
(குறள்-228) |
எனவரும். |
இதுவும் உவகைக்குப் பொருளாக அமையும். |
3. நடுவுநிலையாவது :தமரெனக் கோல் கோடாது பிறரெனக் குணங் கொல்லாது நிற்கும் நயனுடைமையாகிய தகவு. |