மெய்ப்பாட்டியல்
எ - டு :

கன்றமர் கறவை மான

முன்சமத் தொழிந்ததன் தோழற்கு வருமே

(புற-275)
 

போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ
(புற-82)
 

எனவரும். இஃது உவகைக்குப் பொருளாக அமையும்.
 

24. உயிர்ப்பாவது : ஆற்றாமை காரணமாக எழும் நெடுமூச்சு.
 

எ - டு :

திருந்தரை நோன்காழ் வருந்த ஒற்றி

நிலமிசைப் புரளும் கைய, வெய்துயிர்த்து

அலமரல் யானை உருமென முழங்கவும்

(புற-44)
 

பருந்துயிர்த்து,   இடைமதில்  சேக்கும்  புரிசை  (புற-343)  எனவரும்.
இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்.
 

25. கையாறாவது : விருப்பிற்குரிய  பொருளைப்பிரிதலும்  இழத்தலும்
பற்றி வரும் செயலறவு.
 

எ - டு :

புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது

கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர்

வாடிய பசியரா கிப்பிறர்

நாடுபடு செலவின ராயின ரினியே

(புற-240)
 

எனவரும். இஃது அழுகைக்குப் பொருளாக அமையும்.
 

26. இடுக்கணாவது :இடையூறு காரணமாக வரும் துன்பம்.
 

எ - டு :

அறனில் கூற்றம் திறனின்று துணிய

பிறனா யினன்கொல் இறீஇயர் என்உயிரென

துயல்வுறு சிறுமையன் பலபுலந் துறையும்

இடுக்கண் மனையோள் தீரிய இந்நிலை

விடுத்தேன் .... 

(புற-210)
 

எனவரும். இஃது அழுகைக்குப் பொருளாக அமையும்.
 

27. பொச்சாப்பாவது :மறத்தல் கூடாதவற்றை மறந்திருத்தல்.
 

எ - டு :

நள்ளி வாழியோ நள்ளி நள்ளென்

மாலை மருதம் பண்ணிக் காலை

கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி

வரவெமர் மறந்தனர்

(புற-149)
 

எனவரும். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்.