28. பொறாமையாவது :செருக்கும் திறலும் காரணமாக ஒன்றைப் பொறுத்தலாற்றாத பண்பு. |
| எ - டு : | வையங் காவலர் வழிமொழிந் தொழுகப் |
| போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅது |
| இடம்சிறிதென்னும் ஊக்கந் துரப்ப |
(புற-8) |
எனவரும். இது பெருமிதத்திற்குப் பொருளாக வரும். |
அழுக்காறு என்னும் பொறாமை வேறு ; இதுவேறு என உணர்க. அழுக்காறு அறனில் குணமாகலின் அதனை மெய்ப்பாட்டிற்குரிய பொருளாகக் கூறுதல் ஒவ்வாதென அறிக. |
29. வியர்த்தலாவது :இகல் காரணமாக வரும் உள்ளப் புழுக்கம், மெய்ப்புழுக்கம் சிறுபான்மைவரினும் கொள்க. |
| எ - டு : | பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து |
| உள்வேர்ப்பர் ஒள்ளி யவர் |
(குறள்-487) |
இது வெகுளிக்குப் பொருளாக வரும். |
"பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனென் என்றனள்" என்பது மெய்ப்புழுக்கம். இஃது இளிவரல் பற்றி வரும். |
30. ஐயமாவது :ஒரு பொருளை இன்னது என வரைந்துணர்தற் காகாத மனத்தடுமாற்றம். |
| எ - டு : | செருப்பிடைச் சிறுபரலன்னன் |
| ...... ....... ....... ....... ........ ........ ....... ......... ...... |
| யார்கொலோ அளியன் தானே, தேரின் |
| ஊர்பெரி திகந்தன்று மிலனே, அரண்எனக் |
| காடுகைக் கொண்டன்று மிலனே |
(புற-257) |
எனவரும். |
| நாடனென்கோ ஊரனென்கோ |
| பாடிமிழ் பனிக்கடல் சேர்ப்ப னென்கோ |
| யாங்ஙனம் மொழிகோ ஓங்குவாட் கோதையை |
(புற-49) |
என்பதுமது. ஈண்டு இஃது உவகைக்குப் பொருளாக நின்றது. இது பிற மெய்ப்பாட்டிற்குரிய பொருளாகவும் வரும். |
31. மிகையாவது :பழிவழிச் செல்லும் செருக்கு - குற்றம். |
| எ - டு : | மன்னிய சென்ற ஒண்ணுத லரிவை |
| புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு |
| ஒன்பதிற் றொன்பது களிற்றொடு அவள்நிறை |