இமைப்பே அச்சம்" (கள-4) என்னுமவற்றான் ஐயம் நீங்கி மெய்தொட்டுப்பயிறல் முதலாயவற்றை நிகழ்த்தித் தலைவியைக் கூடும் தெய்வப் புணர்ச்சிக்கு முன்னும் பின்னும் இருவர் மாட்டும் நிகழும் உணர்வுகளையும் செயல்களையும், களவியலுள் |
| வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல் |
| ஆக்கஞ் செப்பல் நாணுவரை யிறத்தல் |
| நோக்குவ வெல்லாம் அவையே போறல் |
| மறத்தல் மயக்கம் சாக்கா டென்றிச் |
| சிறப்புடை மரபினவை களவென மொழிப, எனவும் |
| முன்னிலை யாக்கல் சொல்வழிப் படுத்தல் |
| நன்னய முரைத்தல் நகைநனி யுறாஅ |
| அந்நிலை யறிதல் தெளிவகப் படுத்தலென்று |
| இன்னவை நிகழும் என்மனார் புலவர் |
(கள.10) |
எனவும் கூறியவற்றானும், மெய்தொட்டுப்பயிறல், பொய்பாராட்டல் முதலிய கிளவிகளானும் புலப்படுத்திய உணர்வுகளையும் செயல்களையும் தொன்னூலார் மரபு பற்றி இருபத்து நான்கு பொருள்களாக வகுத்து அவற்றை ஆறு கூறுகளாக்கி ஓதுகின்றார். அவற்றுள் இச்சூத்திரம் முதலாங்கூறுபற்றி வரும் பொருள் புகுமுகம் புரிதல் முதலாய நான்குமாம் என்கின்றது. |
பொருள் : புகுமுகம் புரிதல், பொறிநுதல்வியர்த்தல், நகுநய மறைத்தல் சிதைவு பிறர்க்கின்மை என்னும் தகவாய முறைமையுடைய நான்கும் முதற்கூறு என மொழிவர் ஆசிரியர். |
ஒடு எண்ணுப் பொருட்டாய் வந்தது. ஏகாரம் இசைநிறை. |
1. புகுமுகம் புரிதலாவது :ஒருவர் ஒருவரை நோக்குதற்கண் ஒருவர் மற்றொருவர் நோக்கிற்கு உள்ளாதலை விரும்புதல். |
| நாட்ட மிரண்டும் அறிவுடம் படுத்தற்குக் |
| கூட்டி உரைக்கும் குறிப்புரை யாகும் |
(கள-5) |
என்றாராகலின், ஈண்டு முகமென்றது அந்நாட்டத்தினை என்பது தெளியப்படும். புரிதல் - விரும்புதல். |
| எ - டு : | கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் |
| என்ன பயனு மில |
(குறள்-1100) |
எனவரும். இஃது உவகைக்குப் பொருளாக வரும். |
இது தலைவிக்கே உரிய பொருளெனக் கூறுவர் பேராசிரியர். அது பொருந்துமாறில்லை. |