இவை நான்கும் முறையாக அமைந்த செய்யுளாகப் பேராசிரியர் காட்டும் மேற்கோள். |
| யான்றற் காண்டொறும் தான்பெரிது மகிழாள் |
| வாணுதல் வியர்ப்ப நாணினள் இறைஞ்சி |
| மிகைவெளிப் படாது நகைமுகங் கரந்த |
| நன்னுதல் அரிவை தன்மனஞ் சிதைந்ததை |
| நீயறிந் திலையால் நெஞ்சே |
| யானறிந்தேனது வாயாகுதலே |
என்பதாகும். |
இஃது உரைக்கேற்ப யாத்த பாடலாகும். |
| சூ. 263 : | கூழை விரித்தல் காதொன்று களைதல் |
| ஊழணி தைவரல் உடைபெயர்த் துடுத்தலொடு |
| ஊழி நான்கே இரண்டென மொழிப |
(14) |
க - து : | கூழைவிரித்தல் முதலிய நான்கும் இரண்டாங்கூறு என்கின்றது. |
பொருள் :கூழை விரித்தல், காதொன்று களைதல், ஊழணி தைவரல் உடைபெயர்த்துடுத்தல் ஆகிய முறைமையுடைய நான்கும் இரண்டாங்கூறு என மொழிவர் ஆசிரியர். |
1. கூழை விரித்தலாவது :கண்கூட முடித்த கனங்குழல் உள்ளத்தின் கண் நேர்ந்த சிதைவான் நெகிழ்ந்தமையின் அதனைச் செம்மையுறுத்தற் பொருட்டு விரித்தல். |
இது செயன்மையாயினும் காதற்குறிப் புடையமையான் மெய்ப்பாட்டிற்குப் பொருளாயமைந்ததென அறிக. பின்வரும் செயற்பாடுகளுக்கும் இவ்விளக்கம் ஒக்கும். இதற்குப் பேராசிரியர் வலிந்து கூறும் விளக்கம் நூல்நெறிக்கு ஏலாமையை ஓர்ந்து கொள்க. இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும். எடுத்துக்காட்டு வந்துழிக் கண்டுகொள்க. |
2. காதொன்று களைதலாவது :காதணியாகிய தோடு செவித்துளையில் ஒன்ற நிறுத்துவதாகலின் உள்ளத்து நேர்ந்த சிதைவினான் மேனி மெலிந்தமை போன்ற உணர்வு காரணமாக முன்னர் விரித்த குழலை முடிப்பவள் ஆங்கே காதணிகள் தாம்நெகிழ்ந்து வீழாமுன் அவற்றை நன்கு பொருத்துதற்காகக் களைந்து கொள்ளுதல். காதொன்று-காதணி, தொடுத்தல் தொடியாயினாற்போல ஒன்றுதல் ஒன்று என நின்றது. இதனைத் தொழிலாகு பெயர் என்ப. இதுவும் இளிவரலுக்குப் பொருளாக அமையும். எடுத்துக்காட்டு வந்துழிக் கண்டு கொள்க. |