தலைவியின் பண்பு முதலியவற்றைப் புனைந்து தனது மீளா வேட்கையைத் தலைவன் விதந்து கூறலின் பாராட்டல் என்னாது பாராட்டு எடுத்தல் என்றார். இஃது இருவர்க்கும் ஒக்குமாயினும் |
| காமத் திணையிற் கண்ணின்று வரூஉம் |
| நாணு மடனும் பெண்மைய வாகலின் |
| குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை |
| நெறிப்பட வாரா அவள்வயி னான |
(கள-18) |
என்பது மரபு பற்றிய விதியாகலின் தலைவி பாராட்டுதல் அவள் உள்ளத்தே நிகழுமென அறிக. தலைவன் பாராட்டுதல் வெளிப்பட நிகழும் என்க. |
| எ - டு : | கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி |
| காமஞ் செப்பாது கண்டது மொழிமோ |
| பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் |
| செறியெயிற் றரிவை கூந்தலின் |
| நறியவு முளவோ நீஅறியும் பூவே |
(குறு-2) |
என்பது தலைவன் தலைவியைப் பாராட்டியது. |
| நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று |
| நீரினும் ஆரள வின்றே சாரற் |
| கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு |
| பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே |
(குறு-3) |
என்பது தலைவி பின்னொரு காலத்துத் தோழியிடத்துத் தலைவனைப் பாராட்டிய பாராட்டு. இந்நுட்பந் தோன்றப் பாராட்டுரைத்தல் என்னாது பாராட்டு எடுத்தல் என்றார் என அறிக. இஃது உவகைக்குப் பொருளாக அமையும். |
2. மடந்தப உரைத்தலாவது :பெதும்பைப் பருவத்து முற்றி நின்ற மடப்பம் சிறிது நீங்கத் தலைவி அளவோடு பேசுதலாம். மடம் பெண்மைக்குரிய குணனாகலான் இது தலைவற்குரித்தன்மை புலப்படும். இது பெரும்பான்மையும் தலைவிக்குத் தோழியை நோக்கியதாக நிகழும். |
| எ - டு : | அன்னாய் வாழி வேண்டன்னை என்னை |
| தானும் மலைந்தான் எமக்குந்தழை யாயின |
| பொன்வீ மணியரும் பினவே |
| என்ன மரம்கொல் அவர்சா ரலவ்வே |
(ஐங்-20) |
இதன்கண் தலைவி செவிலிக்குத் தன் களவொழுக்கத்தைப் புலப்படுத்துமாறு தோழியிடம் கூறும் மடனழிவு கண்டு கொள்க. |