மற்றும் பேராசிரியர் "எனவென்னும் எச்சம் பற்றி வருவனவும்" என்பார். அதனை இன்ன என்பதன் திரிபாகிய என்ன என்பதன் இடைக்குறைவாகக் கோடலே உரிச்சொல் மரபிற்கொத்த தென்க. இனி, இவ்வுவமச் சொற்களை வினை, பயன், மெய், உரு என்னும் நால் வகைக்கும் பிரித்து உரிமை செய்து கூறுவார். அவற்றுள் கூறப்பெறாமல் ஈண்டுக் கூறப்பெற்றவை ஒன்ற, என்ற, மாற்ற, பொற்ப, நாட, நடுங்க என்னும் ஆறுமாம். ஈண்டுக் கூறாமல் வகைச் சூத்திரத்துக் கூறப்பெற்றவை நேர, நோக்க என்னும் இரண்டுமாம். வகைச் சூத்திரத்துக் கூறப்பெறாத ஆறும் பொதுவானவை என்பார் பேராசிரியர். வகைச் சூத்திரத்துக் கூறப்பெறாத ஆறற்கும் அன்னபிற என்பதனாற் கொள்ளப்பட்டவற்றிற்கும் ஈண்டு எடுத்துக்காட்டுத் தருதும். ஏனைவற்றிற்கு அவ்வச் சூத்திரவுரையுள் காட்டுதும். |