| எ - டு : | மகிழ்ந்ததன் றலையும் நறவுண் டாங்கு |
| விழைந்த தன்தலையும் நீவெய் துற்றனை |
| அருங்கரை நின்ற உப்பொய் சகடம் |
| பெரும்பெயல் தலைய வீஇந் தாங்கிவள் |
| இரும்பல் கூந்தல் இயலணி கண்டே |
(குறுந்-165) |
இதன்கண் தலைவன் வேட்கை புலப்படுமாறு கண்டுகொள்க. |
| கவவுக் கடுங்குரையள் காமர் வனப்பினள் |
| குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே |
| யாங்கு மறந்தமைகோ யானே ஞாங்கர்க் |
| கடுஞ்சுரை நல்லான் நடுங்குதலைக் குழவி |
| தாய்காண் விருப்பின் அன்ன |
| சாஅய் நோக்கினள் மாஅ யோளே |
(குறு-132) |
இதன்கண் ஒருதலையுள்ளுதல் அமைந்திருத்தலைக் கண்டு கொள்க. |
| பூவொடு புரையும் கண்ணும் வேயென |
| விறல்வனப் பெய்திய தோளும் பிறையென |
| மதிமயக் குறூஉம் நுதலும் நன்றும் |
| நல்லமன் வாழி தோழி அல்கலும் |
| தயங்குதிரை பொருத தாழை வெண்பூக் |
| குருகென மலரும் பெருந்துறை |
| விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ வூங்கே |
(குறு-226) |
இதன்கண் தலைவி வனப்புமெலிவு புலப்படுதல் காண்க. |
| அமிழ்துபொதி செந்நா அஞ்ச வந்த |
| வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவையைப் |
| பெறுகதில் அம்ம யானே பெற்றாங்கு |
| அறிகதில் அம்மஇவ்வூரே மறுகில் |
| நல்லோள் கணவன் இவன்எனப் |
| பல்லோர் கூறயாஅம் நாணுகம் சிறிதே |
(குறு-14) |
இதன்கண் தலைவன் ஆக்கஞ்செப்பல் ஒருவாறு அமைந்திருத்தலைக் கண்டுகொள்க. |
| காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு |
| நல்லாண்மை என்னும் புணை. |
(குறள் 1134) |
இது நாணுவரையிறத்தல். |
| யார்அணங் குற்றனை கடலே பூழியர் |
| சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன |