களவியல்17
எ - டு :

மகிழ்ந்ததன் றலையும் நறவுண் டாங்கு

விழைந்த தன்தலையும் நீவெய் துற்றனை

அருங்கரை நின்ற உப்பொய் சகடம்

பெரும்பெயல் தலைய வீஇந் தாங்கிவள்

இரும்பல் கூந்தல் இயலணி கண்டே

(குறுந்-165)
 

இதன்கண் தலைவன் வேட்கை புலப்படுமாறு கண்டுகொள்க.
 

கவவுக் கடுங்குரையள் காமர் வனப்பினள்

குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே

யாங்கு மறந்தமைகோ யானே ஞாங்கர்க்

கடுஞ்சுரை நல்லான் நடுங்குதலைக் குழவி

தாய்காண் விருப்பின் அன்ன

சாஅய் நோக்கினள் மாஅ யோளே

(குறு-132)
 

இதன்கண் ஒருதலையுள்ளுதல் அமைந்திருத்தலைக் கண்டு கொள்க.
 

பூவொடு புரையும் கண்ணும் வேயென

விறல்வனப் பெய்திய தோளும் பிறையென

மதிமயக் குறூஉம் நுதலும் நன்றும்

நல்லமன் வாழி தோழி அல்கலும்

தயங்குதிரை பொருத தாழை வெண்பூக்

குருகென மலரும் பெருந்துறை

விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ வூங்கே

(குறு-226)
 

இதன்கண் தலைவி வனப்புமெலிவு புலப்படுதல் காண்க.
 

அமிழ்துபொதி செந்நா அஞ்ச வந்த

வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவையைப்

பெறுகதில் அம்ம யானே பெற்றாங்கு

அறிகதில் அம்மஇவ்வூரே மறுகில்

நல்லோள் கணவன் இவன்எனப்

பல்லோர் கூறயாஅம் நாணுகம் சிறிதே

(குறு-14)
 

இதன்கண் தலைவன்    ஆக்கஞ்செப்பல்   ஒருவாறு  அமைந்திருத்தலைக்
கண்டுகொள்க.
 

காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு

நல்லாண்மை என்னும் புணை.

(குறள் 1134)
 

இது நாணுவரையிறத்தல்.
 

யார்அணங் குற்றனை கடலே பூழியர்

சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன