20களவியல்

ஒம்புமதி வாழியோ வாடை!
(குறுந்-235)
 

இது தலைவன் வாடையை முன்னிலைப்படுத்தியது.
 

குணகடற் றிரையது பறைதபு நாரை

..... ..... ...... ...... ...... ...... ....... .......

நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே

(குறு-128)
 

இது    தலைவன்   தன்   நெஞ்சினை  முன்னிலைப் படுத்தியது. பிறவும்
சான்றோர் செய்யுட்கண் கண்டுகொள்க.
 

2) சொல்வழிப்படுத்தல்    என்பது :    முன்னிலையாக்கிக்   கொண்ட
மாந்தரையும்    நெஞ்சு    முதலாயவற்றையும்   தன்      கருத்தின்வழி
ஒழுகவேண்டுதலாம்.
 

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமஞ் செப்பாது கண்டது மொழிமோ

பயலியது கெழீஇய நட்பின் மயிலியல்

செறியெயிற் றிரிவை கூந்தலின்

நறியவும் உளவோநீ அறியும் பூவே

(குறு-2)
 

இது தலைவன் தும்பியைச் சொல்வழிப்படுத்தியது.
 

கானலம் பெருந்துறைக் கலிதிரை திளைக்கும்

வானுயர் நெடுவரை ஏறி ஆனாது

காண்கம் வம்மோ தோழி

      

செறிவளை நெகிழ்த்தோன் எறிகடல் நாடே

(ஐங்-199)
 

இது தோழி   தலைவியைச்   சொல்வழிப்படுத்தியது.    பிறவும் இவ்வாறே
கண்டுகொள்க.
 

  3) நன்னய முரைத்தல் என்பது : தமது   ஆராத    காதல் புலப்பட இதனைச்    செய்தல்    அறத்தாறாகும்    எனத்தம் விருப்பினை இனிது
எடுதியம்புதலாம்.
 

இஃது       அகத்திணைக்குரியவாகப்      பின்னர்     ஓதப்பெறும்
மெய்ப்பாட்டுப்     பொருள்களுள்   'மடந்தப    உரைத்தல்'    என்னும்
பொருளாம். ஏனையவற்றிற்கும்    இவ்வாறே   மெய்ப்பாட்டுப்   பொருள்
நிலைகளை    அறிந்து   கொள்க. மெய்ப்பாட்டுணர்வு தோன்றாமல் கூற்று
நிகழ்தல் ஏலாதென அறிக.
 

இதற்கு நச்சினார்க்கினியர்    தனது    கழிபெருங்  காதலைக் கூறுதல்
எனப் பொருளுரைப்பார். அஃதொன்றே ஆசிரியர் கருத்தாயின்   நன்னயப்
புரைத்தல் என வரைந்தோதியிருப்