களவியல்21

பார்மன்.    நயம்    என்பது   அன்பு,  அறம், இனிமை, எளிமை, பண்பு
முதலாயவற்றையுணர்த்தும்    சொல்லாதலின்   அவை எல்லாம் அடங்கக்
கூறினார் என்க.
 

எ - டு :

யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி யறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே

(குறு-40)
 

இது தலைவன் தலைவியிடத்து நன்னய முரைத்தது.
 

பெருநன் றாற்றின் பேணாரும் உளரே

ஒருநன் றுடையள் ஆயினும் புரிமாண்டு

புலவி தீர அளிமதி இலைகவர்பு

ஆடமை ஒழுகிய தண்ணறுஞ் சாரல்

மென்னடை மரையா துஞ்சும்

நன்மலை நாட நின்னல திலளே

(குறு-115)
 

இது தோழி தலைவனிடத்து நன்னய   முரைத்தது.    பிறவும்   இவ்வாறே
கண்டுகொள்க.
 

4) நகைநனியுறாஅ     அந்நிலையறிதல்    என்பது :    கூட்டத்திற்கு
ஏதுவாகும்    முறுவற்    குறிப்பு மிக்குத்   தோன்றாமல் அடக்கி நிற்கும்
தலைவியது பெண்மையுணர்வைத் தலைவன்  அறிந்து கோடலாம். உறாமை
தலைவிக்கும் அறிதல் தலைவற்கும் கொள்க.   இஃது   உவகை   என்னும்
மெய்ப்பாட்டிற்குரிய     நகுநய    மறைத்தல்  என்னும் பொருள் தோன்ற
நிகழும் என்க.
 

எ - டு :

சொல்லின் சொல்லெதிர் கொள்ளாய் யாழநின்

திருமுக மிறைஞ்சி நாணுதி கதுமெனக்

காமங் கைம்மிகின் தாங்குதல் எளிதோ

கொடுங்கே ழிரும்புறம் நடுங்கக் குத்திப்

புலிவிளை யாடிய புலவுநாறு வேழத்தின்

தலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின்

கண்ணே கதவ வல்ல நண்ணார்

அரண்டலை மதில ராகவும் முரசுகொண்டு

ஓம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன்

பெரும்பெயர்க் கூட லன்னநின்

கரும்புடைத் தோளும் உடையவா லணங்கே

(நற்-39)
 

என்பது தலைவன் தலைவி நிலையறிந்தது.