22களவியல்

5) மெலிவு    விளக்குறுத்தல்  என்பது :    தணத்தலும்      வரைவு
நீட்டித்தலும்     அலரெழுதலும்,    தமர்      வரைவுமறுத்தலும்  பிறவு
மாகியவற்றான் நேர்ந்த       வருத்தத்தைக்  கேட்போர்   உளங்கொளக்
கூறுதலாம்.
 

அறத்தொடு  நிலை, வரைவு கடாதல், அல்ல குறிப்படுதல் முதலியவை
பற்றி நேர்வனவெல்லாம் இதன்கண் அடங்கும்.
 

எ - டு :

ஒண்டொடி அரிவை கொண்டனள் நெஞ்சே

வண்டிமிர் பனித்துறைத் தொண்டி யாங்கண்

உரவுக்கடல் ஒலித்திரை போல

இரவி னானும் துயிலறி யேனே

(ஐங்-172)
 

இது தலைவன் தன் மெலிவு கூறியது.
 

மன்ற மராஅத்த பேஎம்முதிர் கடவுள்

கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதும்

கொடிய ரல்லரெம் குன்றுகெழு நாடர்

பசைஇப் பசந்தன்று நுதலே

ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே.

(குறு-87)
 

இது தலைவி தன் மெலிவு கூறியது, பிறவும் இவ்வாறே கண்டு கொள்க.
 

6) தம்நிலையுரைத்தல் என்பது:    களவொழுக்கத்தின்    கண் நிகழும்
நிகழ்ச்சிகட்கு ஏற்பத்தலைவன்,    தலைவி,    தோழி   முதலானோர் தம்
நிலையினை எடுத்துக் கூறுதலாம்.
 

தலைவன்     பாங்கனிடத்தும்,   தோழியிடத்தும்    கூறலும் தலைவி
அறத்தொடுநிலை, வரைதல் வேட்கை    பற்றியவாகக் கூறலும்     தோழி
சேட்படை   உடன்   போக்கு   முதலியவை   பற்றிக்   கூறலும் பிறவும்
இதன்கண் அடங்கும்.
 

எ - டு :

இடிக்குங் கேளிர் நுங்குறை யாக

நிறுக்க லாற்றினோ நன்றுமன் தில்ல

ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்

கையில் ஊமன் கண்ணிற் காக்கும்

வெண்ணெய் உணங்கல் போல

பரந்தன் றிந்நோய் தோன்றுகொளற் கரிதே

(குறு-58)
 

இது தலைவன் பாங்கனிடத்துத் தன்நிலை கூறியது.
 

உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின் அகன்றலை

ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்காடு