களவியல்23

இன்னா என்றிர் ஆயின்

இனியவோ பெரும தமியோர்க்கு மனையே

(குறு-124)
 

இது   தலைவி    தலைவனிடத்துத் தன்நிலை கூறியது. பிறவும் இவ்வாறே
கண்டுகொள்க.
 

7) தெளிவகப்படுத்தல்   என்பது.  ஒருவர் கொண்ட ஐயமும் அச்சமும்
வருத்தமும்     நீங்கத்   தம்   பேரன்பினையும்     பிரியின்  ஆற்றாத
கேண்மையினையும் சூளுறவொடு கூறித் தெளிவிக்கத் தெளிதலாம்.
 

எ - டு :

மெல்லிய லரிவைநின் நல்லகம் புலம்ப

நிற்றுறந்து அமைகுவ னாயின் எற்றுறந்து

இரவலர் வாரா வைகல்

பலவா குகயான் செலவுறு தகவே.

(குறு-137)
 

இது தலைவன்    தலைவியைத்    தெளிவித்தல்.    பிறவும்   இவ்வாறே
கண்டுகொள்க.
 

களவிற்குரிய   தலைமக்களும் தோழி செவிலி பாங்கன் முதலானோரும்
கூற்றாகவும்    குறிப்பாகவும்     பேசுவனவற்றையெல்லாம்    இதன்கண்
அடங்குமாறறிந்து அடக்கிக் கொள்க.
 

சூ. 103 :

மெய்தொட்டுப் பயிறல் பொய்பாராட்டல்

இடம்பெற்றுத் தழாஅல் இடையூறு கிளத்தல்

நீடுநினைந் திரங்கல் கூடுத லுறுதல்

சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித்

தீராத் தேற்றம் உளபடத் தொகைஇப்

பேராச் சிறப்பின் இருநான்கு கிளவியும்

பெற்றவழி மகிழ்ச்சியும் பிரிந்தவழிக் கலங்கலும்

நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும்

குற்றங் காட்டிய வாயில் பெட்பினும்

பெட்ட வாயில்பெற் றிரவுவலி யுறுப்பினும்

ஊரும் பேரும் கெடுதியும் பிறவும்

நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித்

தோழியைக் குறையுறும் பகுதியும் தோழி

குறையவட் சார்த்தி மெய்யுறக் கூறலும்

தண்டா திரப்பினும் மற்றைய வழியும்

சொல்லவட் சார்தலின் புல்லிய வகையினும்