30களவியல்

நான்காக  வகுத்து  அவற்றுள்  பாங்கற்  கூட்டமும்  ஒன்று என நூலோர்
கூறியுள்ளமையான்      நச்சினார்க்கினியர்       கருத்து      நூலொடு
பொருந்தாமையறியலாம்.
 

எ - டு :

பண்டையை அல்லைநீ இன்று பரிவொன்று

கொண்ட மனத்தை எனவுணர்வல் - கண்டாயால்

நின்னுற்ற தெல்லாம் அறிய வுரைத்தியாற்

பின்னுற்ற நண்பினாய் பேர்ந்து

(நச்-மேற்)
 

இதுபாங்கன் தலைவனை உற்றதுவினாவியது.
 

எலுவ சிறஅர் ஏமுறு நண்ப

புலவ தோழ கேளா யத்தை

மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப்

பசுவெண் டிங்கள் தோன்றி யாங்குக்

கதுப்பயல் விளங்கும் சிறுநுதல்

புதுக்கோள் யானையிற் பிணித்தற்றால் எம்மே

(குறு-129)
 

இது தலைவன் உற்றது உரைத்தது.
 

தேரோன் தெறுகதிர் மழுங்கினும் திங்கள்

தீரா வெம்மையொடு திசைநடுக் குறினும்

பெயராப் பெற்றியிற் றிரியாச் சீர்சால்

குலத்திற் றிரியாக் கொள்கையும் கொள்கையொடு

நலத்திற் றிரியா நாட்டமும் உடையோய்

கண்டதன ளவையிற் கலங்குதி எனின்இம்

மண்டிணி கிடக்கை மாநிலம்

உண்டெனக் கருதி உணரலன் யானே

(நச்-மேற்)
 

இது பாங்கன் கழறியுரைத்தது.
 

இடிக்குங் கேளிர் நுங்குறை யாக

நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல

ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்

கையில் ஊமன் கண்ணிற் காக்கும்

வெண்ணெய் உணங்கல் போலப்

பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே

(குறு-58)
 

இது கழறிய பாங்கற்குத் தலைவன் ஆற்றாமை உரைத்தது.
 

பங்கயமோ துங்கப் பனிதங்கு மால்வரையோ

அங்கண் விசும்போ அலைகடலோ-எங்கோவிச்

செவ்வண்ண மால்வரையே போலும் திருமேனி

இவ்வண்ணம் செய்தாட் கிடம்

(நச்-மேற்)