களவியல்31

இது பாங்கன் நின்னாற் காணப்பட்ட உரு எத்தன்மைத்து?
எவ்விடத்தது? என்று வினாவியது.
 

கழைபா டிரங்கப் பல்லியங் கறங்க

ஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்கயிற்று

அதவத் தீங்கனி யன்ன செம்முகத்

துயத்தலை மந்தி வன்பறழ் தூங்கக்

கழைக்கண் இரும்பொறை ஏறி விசைத்தெழுந்து

குறக்குறு மாக்கள் தாளங் கொட்டும்அக்

குன்றகத் ததுவே குழுமிளைச் சீறூர்

சீறுரோளே நாறுமயிர்க் கொடிச்சி

கொடிச்சி கையகத் ததுவேபிறர்

விடுத்தற் காகாது பிணித்தவென் நெஞ்சே

(நற்-95)
 

இது தலைவன் இவ்விடத்து இத்தன்மைத்து எனக்கூறியது.
 

நெய்வளர் ஐம்பால் நேரிழை மாதரை

மெய்ந்நிலை திரியா மேதகு சுற்ற மொடு

எய்துதல் அரிதென் றின்னன மிரங்கிக்

கையறு நெஞ்சமொடு கவன்றுநனி பெயர்ந்தவென்

பைதல் உள்ளம் பரிவு நீக்கித்

தெய்வத் தன்ன தெரியிழை மென்றோள்

எய்தத் தந்த ஏந்தலொடு எம்மிடை

நற்பாற் கேண்மை நாடொறு மெய்தல்

      

அப்பாற் பிறப்பினும் பெறுகமற் றெமக்கே

(நச்-மேற்)
 

இது  பாங்கனால்   இடந்தலைப்பட்டுத்   தலைவியைக்  கூடிய  தலைவன்
பாங்கனது கேண்மையை உவந்து கூறியது.
 

13) பெட்டவாயில்  பெற்று  இரவு  வலியுறுப்பினும்  என்பது : தலைவி
ஆடிடமறிந்து   வந்து  கூறுந்  துணையல்லது பாங்கன் தலைவியை இரந்து
தலைவியைத் தலைவனொடு  கூட்டுவித்தல் புலனெறி வழக்கமின்மையான் -
இனித்  தலைவியை   எய்துதல்  பாங்கனாற்  கடைபோகாதெனக்  கருதிய
தலைவன்   இடைநின்று   கூட்டுவித்தற்குத் துணையாவாள் தோழியே என
ஓர்ந்து தோழியை எய்தித் தன்  ஆராத காதலை  இரந்து  பின்னிற்றலான்
வற்புறுத்துமிடத்தும் என்றவாறு.
 

பெட்டவாயில்   என்றது   தோழியை.   அஃதாவது     தலைவியான்
விரும்பப்பட்டவள்   என்பது  பொருள்.  அதனான் தோழிக்கு அஃதொரு
காரணப் பெயராயிற்று.
 

தெளிவகப்படுத்தித்   தலைவியை  ஆயத்துய்த்த  காலை ஆயத்தாருள்
தலைவி சிறப்பாக நாடிச் சென்று அவளை