இது பாங்கன் நின்னாற் காணப்பட்ட உரு எத்தன்மைத்து? எவ்விடத்தது? என்று வினாவியது. |
| கழைபா டிரங்கப் பல்லியங் கறங்க |
| ஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்கயிற்று |
| அதவத் தீங்கனி யன்ன செம்முகத் |
| துயத்தலை மந்தி வன்பறழ் தூங்கக் |
| கழைக்கண் இரும்பொறை ஏறி விசைத்தெழுந்து |
| குறக்குறு மாக்கள் தாளங் கொட்டும்அக் |
| குன்றகத் ததுவே குழுமிளைச் சீறூர் |
| சீறுரோளே நாறுமயிர்க் கொடிச்சி |
| கொடிச்சி கையகத் ததுவேபிறர் |
| விடுத்தற் காகாது பிணித்தவென் நெஞ்சே |
(நற்-95) |
இது தலைவன் இவ்விடத்து இத்தன்மைத்து எனக்கூறியது. |
| நெய்வளர் ஐம்பால் நேரிழை மாதரை |
| மெய்ந்நிலை திரியா மேதகு சுற்ற மொடு |
| எய்துதல் அரிதென் றின்னன மிரங்கிக் |
| கையறு நெஞ்சமொடு கவன்றுநனி பெயர்ந்தவென் |
| பைதல் உள்ளம் பரிவு நீக்கித் |
| தெய்வத் தன்ன தெரியிழை மென்றோள் |
| எய்தத் தந்த ஏந்தலொடு எம்மிடை |
| நற்பாற் கேண்மை நாடொறு மெய்தல் |
| | அப்பாற் பிறப்பினும் பெறுகமற் றெமக்கே |
(நச்-மேற்) |
இது பாங்கனால் இடந்தலைப்பட்டுத் தலைவியைக் கூடிய தலைவன் பாங்கனது கேண்மையை உவந்து கூறியது. |
13) பெட்டவாயில் பெற்று இரவு வலியுறுப்பினும் என்பது : தலைவி ஆடிடமறிந்து வந்து கூறுந் துணையல்லது பாங்கன் தலைவியை இரந்து தலைவியைத் தலைவனொடு கூட்டுவித்தல் புலனெறி வழக்கமின்மையான் - இனித் தலைவியை எய்துதல் பாங்கனாற் கடைபோகாதெனக் கருதிய தலைவன் இடைநின்று கூட்டுவித்தற்குத் துணையாவாள் தோழியே என ஓர்ந்து தோழியை எய்தித் தன் ஆராத காதலை இரந்து பின்னிற்றலான் வற்புறுத்துமிடத்தும் என்றவாறு. |
பெட்டவாயில் என்றது தோழியை. அஃதாவது தலைவியான் விரும்பப்பட்டவள் என்பது பொருள். அதனான் தோழிக்கு அஃதொரு காரணப் பெயராயிற்று. |
தெளிவகப்படுத்தித் தலைவியை ஆயத்துய்த்த காலை ஆயத்தாருள் தலைவி சிறப்பாக நாடிச் சென்று அவளை |