தொல்காப்பியப் பொருட் படலத்தில் தலைவன், தலைவி, தோழி, செவிலி, காமக்கிழத்தி முதலியோர் ஒழுகலாறுகளாகவும் கூற்றுக்களாகவும் சுட்டப்பட்டுள்ள பல செய்திகளுக்குச் சங்க இலக்கியத் தொகுப்பில் எடுத்துக்காட்டு இல்லை. அங்ஙனமே சங்க இலக்கியம் குறிப்பிடும் பல செய்திகளுக்குத் தொல்காப்பியப் பொருட்படலத்தில் குறிப்பிடத்தக்க வகையில் நூற்பாவோ நூற்பாத் தொடரோ இல்லை. சில நூற்றாண்டு இடைவெளிக்குள் ஏற்பட்ட புதுமை இது. |