36களவியல்

ஆற்றினள் என்பது கேட்டனம் ஆற்றா

என்னினும் அவளினும் இகந்த

இன்னா மாக்கட்டிந் நன்ன ரூரே (நச்-மேற்)

தோளுங் கூந்தலும் பலபா ராட்டி

வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோற்

குட்டுவன் தொண்டி யன்னவெற்

கண்டு நயந்துநீ நல்காக் காலே

(ஐந்குறு-178)
 

எனவரும். பிறவும் இவ்வாறே கண்டுகொள்க.
 

20) தோழி   நீக்கலின்   ஆகிய   நிலைமையும்  நோக்கி   என்பது :
[உம்மையை நிலைமை நோக்கியும் என மாற்றிக் கூட்டிப்பொருள்  கொள்க]
இவ்விடத்துக் காவலர் கடுகுவர்,  எம் ஐயர்காணின் ஏதமாம்,  உலகியலான்
வந்து தலைவியைப் பெறுக எனத் தோழி சேட்படுத்திக்  கூறிய   நிலையை
எண்ணிக் கையற்றுக் கூறலும் என்றவாறு.
 

எ - டு :

பணைத்தோட் குறுமகள் பாவை தைஇயும்

பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்தும் மற்றுஇவள்

உருத்தெழு வனமுலை ஒளிபெற எழுதிய

தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்

முறையுடை யரசன் செங்கோல் அவையத்து

யான்தற் கடவின் யாங்கா வதுகொல்

பெரிதும் பேதை மன்ற

அளிதோ தானேஇவ் அழுங்க லூரே

(குறுந்-276)
 

உரைத்திசின் தோழியது புரைத்தோ வன்றே

துருக்கங் கமழும் மென்றோள்

துறப்ப என்றி இறீஇயர் என்உயிரே

(சிற்றட்டகம்)
 

எனவரும்.
 

21) மடன்மா   கூறும்  இடனுமாருண்டே என்பது : அஞ்சி யச்சுறுத்தல்
உலகியல்புரைத்தல்   முதலியவற்றான்   தோழி சேட்படுத்தியவழியும், தமர்
உடன்படார் எனக் குறிப்பாற் கூறிய  வழியும்,  இனி  மறுகின்  ஆர்ப்பெழ
மடலேறிப் பெறுதும் எனக்கூறுதலும் உண்டு என்றவாறு.
  

ஏறியமடற்றிறம்  பெருந்திணைக்குரியதாகலின்  அகனைந்திணைக்  கண்
நிகழும்   பெருந்திணைப்பகுதி,   கூற்றாக  உரைக்கு   மளவே அமையும்
என்றற்கு 'மடன்மா கூறும்' என்றும் இம்மடற் கூற்றும் ஒரோவழி   நிகழும்
என்பது உணர இடனுமாருண்டே என்றும் கூறினார்.