இது பாங்கற் கூட்டத்து வாயில் பெட்பினும் என்பதனையும், தோழியற் கூட்டத்து அறிந்தோளயிர்ப்பின் என்பதனையும் சார்ந்து நிகழும். |
| எ - டு : | அமிழ்தத் தன்ன அந்தீங் கிளவி |
| அன்ன இனியோள் குணனும் இன்ன |
| இன்னா அரும்படர் செய்யு மாயின் |
| உடன் உறைவு அரிதே காமம் |
| குறுகல் ஒம்புமின் அறிவுடை யோரே. |
(குறு.206) |
இது பாங்கன் அன்புற்றுரைத்த விடத்துத் தலைவன் கூறியது. |
| நயனின் மையிற் பயனிது என்னாது |
| பூம்பொறிப் பொலிந்த அழலுமிழ் அகன்பைப் |
| பாம்புயி ரணங்கியாங்கும் ஈங்கிது |
| தகாஅது வாழியோ குறுமகள் நகாஅது |
| உரைமதி உடையுமென் உள்ளம் சாரல் |
| கொடுவிற் கானவன் கோட்டுமா தொலைச்சிப் |
| பச்சூன் பெய்த பகழி போலச் |
| சேயரி பரந்த மாயிதழ் மழைக்கண் |
| உறாஅ நோக்க முற்றவென் |
| பைதல் நெஞ்சம் உய்யு மாறே |
(நற்-75) |
இது தோழி அன்புற்று நக்கவிடத்துத் தலைவன் கூறியது. |
4) அவட் பெற்றுமலியினும் என்பது : பாங்கன் தலைவி இவ்விடத்தாள் எனக் கூறி உய்த்த வழியும், தோழி பகற்குறியும் இரவுக்குறியும் நேர்ந்த வழியும், தலைவியைப் பெற்று மகிழ்தற்கண்ணும் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு. இது மூவகைப் புணர்ச்சிக்கும் பொதுப்பட நின்றது. |
| எ - டு : | அணங்குடைப் பனித்துறைத் தொண்டி யன்ன |
| மணங்கமழ் பொழில்குறி நல்கினள் நுணங்கிழை |
| பொங்கரி பரந்த உண்கண் |
| அங்கலிழ் மேனி அசைஇய எமக்கே |
(ஐங்-174) |
| காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கும் |
| மாணிழை கண்ணொவ்வே மென்று |
(குறள்-114) |
எனவரும். |
5) ஆற்றிடையுறுதலும் என்பது : பாங்கனான் இடந்தலைப்பாடுற்றுச் செல்லுங்காலும் இருவகைக் குறியிடத்துச் செல்லுங்காலும் செல்லும் நெறிக்கண் உறும் இடையூறு பற்றியும் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு. |