பெயரால்   பதிப்பித்துள்ள வெள்ளைவாரணனார் ஒவ்வொரு நூற்பாவிற்கும்
தாம் வரைந்துள்ள   ஆய்வுரை   இளம்பூரணர்  உரையை முற்றப் பயின்ற
நச்சினார்க்கினியர் அவர் கருத்தை  விடுத்துத் தாம்   புதியனவாக   உரை
வரைந்துள்ள இடங்களில் அவர் அவ்வாறு  வரைந்ததற்குரிய அடிப்படைக்
காரணத்தை ஆராய முற்படாது பல இடங்களிலும் நச்சினார்க்கினியர் உரை
வலிந்துரையாதலின் ஆசிரியர்   கருத்துக்கு   முரணானது   என்ற   ஒரே
செய்தியைக் குறிப்பிடுவதனையும், பெரும்பாலும்  இளம்பூரணர் உரையையே
எடுத்துச் சொல்வதனையும்,  ஒரோவழி   இருவருரையும் பொருந்தா என்று
புத்துரை     வழங்குவதனையும்   காண்கிறோம்.   அப்   புத்துரைகளில்
பொருந்தாதன இக்காண்டிகை உரையாளரால் ஆங்காங்குக் காரணங்களுடன்
மறுக்கப்பட்டுள்ளன.
 

இவ்வுரையாளர் பெரும்பாலும்   உரையாசிரியருடைய   பாடங்களையே
பின்பற்றுகிறார். ஒரோவழி  நச்சினார்க்கினியர்   பாடங்களும்,   ஒரோவழி
இருவர் பாடமுமல்லாத   வேற்றுப்பாடமும் இவராற் கொள்ளப்பட்டுள்ளன.
அவற்றை நிரலே காண்போம்.
 

நூற.
எண்.
இவர் கொண்ட இளம்பூரணர்
பாடங்கள்
நச்சினார்க்கினியர்
பாடங்கள் 
100மடனும் முந்துறுதல்-முந்துறத்த
102நகைநனி யுறாஅ -நகைநனி உறாஅது
105பாங்கர் நிமித்தம் -பாங்கன் நிமித்தம்
109வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும் -விருந்தி னானும்
113நெறிப்படு நாட்டத்து -நெறிபடு நாட்டத்து
116பின்வா என்றலும் -பின்வர என்றலும்
  அவள் விலங்குறினும் -அவன் விலங்குறினும்
130பின்னிலை முயற்சி  பெறாஅள்-பெறாஅன்
131அறியக் கிளந்த - அறியத் தோன்றும்
148உறலருங் குரைமையின் -உறலருங் குண்மையின்
 மீட்டுவர வாய்ந்த -மீட்டுவரவு ஆய்ந்த
149கொடுமை ஒழுக்கத்து -கொடுமை ஒழுக்கம்
151கிழவோற் சுட்டிய -கிழவோட் சுட்டிய
 புல்லிய புகர்ச்சி -புல்லிய புகற்சி
 சூள்வயின் திறத்தால் -சூள்நயத் திறத்தால்
 படீஇயர் -படீஇ