| எ - டு : | இருள்வீ நெய்தல் இதழகம் பொருந்திக் |
| கழுதுகண் படுக்கும் பானாட் கங்குல் |
| எம்மினும் உயவுதி செந்தலை அன்றில் |
| கானலஞ் சேர்ப்பன் போல நின்பூ |
| நெற்றிச் சேவலும் பொய்த்தன்றோ குறியே |
(நச்-மேற்) |
எனவரும். |
2) காணா வகையிற் பொழுதுநனி இகப்பினும் என்பது; தலைவன் குறியிடத்திற்கு வர இடையூறு நேர்ந்த வழி இற்றை ஞான்று தலைவனைக் காணல் அரிதென வருந்தும் மிக்க பொழுது நீண்டு கழியுமிடத்தும் என்றவாறு. |
தலைவன் வருதற்கிடையூறாவன : நாய்குரைத்தலும், ஊர்துஞ்சாமையும், காவலர்கடுகலும், நிலவு வெளிப்படலும், கூகை குழறலும், கோழிகுரல் காட்டலும் பிறவுமாம். |
| எ - டு : | இரும்பிழி மகாஅர்இவ் அழுங்கல் மூதூர் |
| விழவின் றாயினும் துஞ்சா தாகும் |
| மல்லல் ஆவணம் மறுகுடன் மடியின் |
| வல்லுரைக் கடுஞ்சொல் அன்னை துஞ்சாள் |
| பிணிகோள் அருஞ்சிறை அன்னை துஞ்சின் |
| துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர் |
| இலங்குவே லிளையர் துஞ்சின் வைஎயிற்று |
| வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும் |
| அரவவாய் ஞமலி குரையாது மடியின் |
| பகலுரு உறழ நிலவுக்கான்று விசும்பின் |
| அகல்வாய் மண்டிலம் நின்றுவிரி யும்மே |
| திங்கள் கல்சேர்பு கனையிருள் மடியின் |
| இல்லெலி வல்வசி வளைவாய்க் கூகை |
| கழுதுவழங்கு யாமத்து அழிதகக் குழறும் |
| வளைக்கண் சேவல் வாளாது மடியின் |
| மனைச்செறி கோழி மாண்குரல் இயம்பும் |
| எல்லாம் மடிந்த காலை ஒருநாள் |
| நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே, அதனான் |
| அரிபெய் புட்டில் ஆர்ப்பப் பரிசிறந்து |
| ஆதி போகிய பாய்பரி நன்மா |
| நொச்சி வேலித் தித்தன் உறந்தைக் |
| கன்முதிர் புறங்காட் டன்ன |
| பல்முட்டின்றால் தோழி நங்களவே |
(அகம்-122) |
எனவரும். |