| எ - டு : | நாள்வலை முகந்த கோள்வல் பரதவர் |
| நுணங்குமண லாங்கண் உணங்கப் பெய்ம்மார் |
| பறிகொள் கொள்ளையர் மறுக உக்க |
| மீனார் குருகின் கானலம் பெருந்துறை |
| எல்லை தண்பொழில் சென்றென செலீஇயர் |
| தேர்பூட் டயர ஏஎய் வார்கோல் |
| செறிதொடி திருத்தி பாறுமயிர் நீவி |
| செல்லினி மடந்தைநின் தோழியொடு மனையெனச் |
| சொல்லிய அளவைத் தான்பெரிது கலுழ்ந்து |
| தீங்கா யினள்இவ ளாயின் தாங்காது |
| நொதுமலர் போலப் பிரியின் கதுமெனப் |
| பிறிதொன் றாகலும் அஞ்சுவல் அதனால் |
| சேணின் வருநர் போலப் பேணா |
| இருங்கலி யாணர் எம்சிறுகுடித் தோன்றின் |
| வல்லெதிர் கொண்டு மெல்லிதின் வினைஇத் |
| துறையும் மான்றன்று பொழுதே சுறவும் |
| ஓதம் மல்கலின் மாறா யினவே |
| எல்லின்று தோன்றல் செல்லா தீமென |
| எமர்குறை கூறத் தங்கி ஏமுற |
| இளையரும் புரவியும் இன்புற நீயும் |
| இல்லுறை நல்விருந் தயர்தல் |
| ஒல்லுதும் பெருமநீ நல்குதல் பெறினே |
(அகம்-300) |
எனவரும். |
விருந்தினானும் எனப்பாடங் கொண்டு அதற்கேற்ப உரைப்பார் நச்சினார்க்கினியர். |
6) தாளாண் எதிரும் பிரிவி னானும் என்பது : தாளாண்மை புரியும் பொருட்டுத் தலைவற்குப் பிரிவு நேர்ந்தவிடத்தும் என்றவாறு. |
''வெளிப்படைத் தானே கற்பினொ டொப்பினும் |
ஞாங்கர்க் கிளந்த மூன்று பொருளாக |
வரையாது பிரிதல் கிழவோற் கில்லை'' (சூ-51) என்றதனான் |
தலைவன் வரைந்தல்லது பகைவயிற் பிரிதல் மரபன்மையான் இது பகைவர் மண்ண சையுற்றும் மைந்து பொருளாகவும் வலிந்து போரொடு வந்தவிடத்து அவரை அடர்த்தொடுக்குதலைக் கருதிப் பிரியும் பிரிவெனக் கொள்க. இப்பிரிவு அந்தணர் ஒழிந்த மூவர்க்கும் ஏற்கும். |