| எஞ்சாது, எல்லா, கொடுமை நுவலாதி |
| அஞ்சுவது அஞ்சா அறனிலி யல்லன்என் |
| நெஞ்சம் பிணிக்கொண்டவன்" |
என மறுத்து இயற்பட மொழிந்தவாறு கண்டுகொள்க. |
| அருவி வேட்கைப் பெருமலை நாடற்கு |
| யான்எவன் செய்கோ என்றி யானது |
| நகையென உணரே னாயின் |
| என்னா குவைகொல் நன்னுதல் நீயே |
(குறு-96) |
என்பதுமது. |
9) வரைவுடம் படுதலும் என்பது : தலைவற்குத் தமர் வரைவு நேர்ந்தவிடத்தும் என்றவாறு. இது தன்னானும் தோழியானும் அறிந்தவழி நிகழும். |
| எ - டு : | ஒறுப்ப ஓவலர் மறுப்பத் தேறலர் |
| தமியர் உறங்கும் கௌவை யின்றாய் |
| இனியது கேட்டின் புறுகவிவ் வூரே |
| முனாஅது யானையங் குருகின் கானலம் பெருந்தோடு |
| அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம் |
| குட்டுவன் மாந்தை யன்னவெம் |
| குழைவிளங்கு ஆய்நுதற் கிழவனு மவனே. |
(குறு-34) |
10) ஆங்கதன் புறத்துப் புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇக் கிழவோள் மேன என்மனார் புலவர் = ஆங்குத் தமர் வரைவு நேர்தல் தலைவற்குப் புறத்ததாய வழித் தனது கற்பும் இற்பிறப்புமாகிய உயர்வு விளங்குமாறு தோன்றி, வந்த பிறர் வரைவினை மறுத்துக் கூறுதலாகிய கிளவியொடு கூடி நிகழும் கிளவிகள் எல்லாம் களவொழுக்கத்தின்கண் தலைவியிடத்தனவாம் எனக் கூறுவர் புலவர். |
'ஆங்கதன் புறத்து' என்றது நொதுமலர் வரைவு கருதி வருதலை. புரை = உயர்வு. அஃது ஈண்டுத் தலைவியின் கடைப்பிடியைச் சுட்டி நின்றது. |
| எ - டு : | பலவிற் சேர்ந்த பழமார் இனக்கலை |
| சிலைவிற் கானவன் செந்தொடை வெரீஇச் |
| செருவுறு குதிரையின் பொங்கிச் சாரல் |
| இருவெதிர் நீடமை தயங்கப் பாயும் |
| பெருவரை அதடுக்கத்துக் கிழவோன் என்றும் |
| அன்றை யன்ன நட்பினன் |
| புதுவோர்த் தம்மவிவ் வழுங்க லூரே. |
(குறு-385) |
எனவரும். |