| சூ. 113 : | மறைந்தவற் காண்டல் தற்காட் டுறுதல் |
| நிறைந்த காதலின் சொல்லெதிர் மழுங்கல் |
| வழிபாடு மறுத்தல் மறுத்தெதிர் கோடல் |
| பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல் |
| கைப்பட்டுக் கலங்கினும் நாணுமிக வரினும் |
| இட்டுப்பிரி விரங்கினும் அருமைசெய்த யர்ப்பினும் |
| வந்தவழி எள்ளினும் விட்டுயிர்த் தழுங்கினும் |
| நொந்துதெளி வொழிப்பினும் அச்சம் நீடினும் |
| பிரிந்தவழிக் கலங்கினும் பெற்றவழி மலியினும் |
| வருந்தொழிற் கருமை வாயில் கூறினும் |
| கூறிய வாயில் கொள்ளாக் காலையும் |
| மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு |
| நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும் |
| உயிராக் காலத்து உயிர்த்தலும் உயிர்செல |
| வேற்றுவரைவு வரினது மாற்றுதற் கண்ணும் |
| நெறிப்படு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும் |
| பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி |
| ஒருமைக் கேண்மையின் உறுகுறை தெளிந்தோள் |
| அருமை சான்ற நாலிரண்டு வகையின் |
| பெருமை சான்ற இயல்பின் கண்ணும் |
| பொய்தலை யடுத்த மடலின் கண்ணும் |
| கையறு தோழி கண்ணீர் துடைப்பினும் |
| வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும் |
| குறியின் ஒப்புமை மருடற் கண்ணும் |
| வரைவுதலை வரினும் களவறி வுறினும் |
| தமர்தற் காத்த காரண மருங்கினும் |
| தன்குறி தள்ளிய தெருளாக் காலை |
| வந்தவன் பெயர்ந்த வருங்களம் நோக்கித் |
| தன்பிழைப் பாகத் தழீஇத் தேறலும் |
| வழுவின்று நிலைஇய இயற்படு பொருளினும் |
| பொழுதும் ஆறும் புரைவ தன்மையின் |
| அழிவு தலைவந்த சிந்தைக் கண்ணும் |
| காமஞ் சிறப்பினும் அவனளி சிறப்பினும் |
| ஏமஞ் சான்ற உவகைக் கண்ணும் |