| தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தையும் |
| அன்னவு முளவே ஓரிடத் தான |
(21) |
க - து : | இயற்கைப்புணர்ச்சி முதலாக உடன்போக்கு ஈறாகக் களவின்கண் நிகழும் தலைவியது ஒழுகலாறும் அவ்வழி அவள் கூற்று நிகழ்த்துமாறும் பற்றிய கிளவிகள் இவை என்கின்றது. |
பொருள் :1) மறைந்தவற் காண்டல் என்பது : தலைவன் தன்னைக் காணா வண்ணம் ஒரு கொம்பானும் கொடியானும் சார்ந்து மறைந்துநின்று தான் அவனைக் காணுதல். இது தலைவற்கோதிய இடம் பெற்றுத் தழாஅல், இடையூறு கிளத்தல் ஆகியவை நிகழ்வுழி நிகழும். |
| எ - டு : | 'கவவுக் கடுங்குரையள்' என்னும் குறுந்தொகையுள் |
| கடுஞ்சுரை நல்லான் நடுங்குதலைக் குழவி |
| தாய்காண் விருப்பின் அன்ன |
| சாஅய் நோக்கினள் மாஅ யோளே |
(குறு-132) |
எனத்தலைவன் பாங்கனிடத்துக் கூறிய கூற்றினுள் இந்நிகழ்ச்சி புலப்படுமாறு கண்டுகொள்க. |
2) தற்காட்டுறுதல் என்பது : அங்ஙனம் மறைந்துநிற்குமிடத்துத் தன்னை முழுதும் மறைக்காமல் தலைவற்குச் சிறிது புலப்படுமாறு காட்டிநிற்றல். |
| எ - டு : | மகிழ்ந்ததன் றலையும் நறவுண் டாங்கு |
| விழைந்ததன் தலையும் நீவெய் துற்றனை |
| இருங்கரை நின்ற உப்பொய் சகடம் |
| பெரும்பெயல் தலைய வீஇந்த தாங்கிவள் |
| இரும்பல் கூந்தல் இயலணி கண்டே |
(குறுந்-165) |
இதன்கண் தலைவிதன் கதுப்பணி தோன்ற நின்று காட்டியவாறறிக. |
3) நிறைந்தகாதலின் சொல்லெதிர் மழுங்கல் என்பது : தலைவன் நிரம்பிய காதலுணர்வினான் வினவும் சொற்கு எதிர் மொழி பேச இயலாது நிற்றல். இது தலைவன் நீடு நினைந்திரங்கிக் கூறுதற்கண் நிகழும். |
| எ - டு : | சொல்லின் சொல்லெதிர் கொள்ளாய் யாழநின் |
| திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமெனக் |
| காமங் கைம்மிகின் தாங்குதல் எளிதோ |
| கொடுங்கேழ் இரும்புறம் நடுங்கக் குத்திப் |
| புலிவிளை யாடிய புலவுநாறு வேழத்தின் |