களவியல்53

தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தையும்

அன்னவு முளவே ஓரிடத் தான

(21)
 

க - து :

இயற்கைப்புணர்ச்சி     முதலாக      உடன்போக்கு    ஈறாகக்
களவின்கண்    நிகழும்         தலைவியது      ஒழுகலாறும்
அவ்வழி   அவள்  கூற்று  நிகழ்த்துமாறும்  பற்றிய   கிளவிகள்
இவை என்கின்றது.
 

பொருள் :1) மறைந்தவற்  காண்டல்   என்பது : தலைவன் தன்னைக்
காணா  வண்ணம்  ஒரு கொம்பானும் கொடியானும் சார்ந்து மறைந்துநின்று
தான் அவனைக் காணுதல். இது தலைவற்கோதிய இடம் பெற்றுத் தழாஅல்,
இடையூறு கிளத்தல் ஆகியவை நிகழ்வுழி நிகழும்.
 

எ - டு :

'கவவுக் கடுங்குரையள்' என்னும் குறுந்தொகையுள்

கடுஞ்சுரை நல்லான் நடுங்குதலைக் குழவி

தாய்காண் விருப்பின் அன்ன

சாஅய் நோக்கினள் மாஅ யோளே

(குறு-132)
 

எனத்தலைவன்    பாங்கனிடத்துக்   கூறிய    கூற்றினுள்    இந்நிகழ்ச்சி
புலப்படுமாறு கண்டுகொள்க.
 

2) தற்காட்டுறுதல் என்பது : அங்ஙனம் மறைந்துநிற்குமிடத்துத் தன்னை
முழுதும் மறைக்காமல் தலைவற்குச் சிறிது புலப்படுமாறு காட்டிநிற்றல்.
 

எ - டு :

மகிழ்ந்ததன் றலையும் நறவுண் டாங்கு

விழைந்ததன் தலையும் நீவெய் துற்றனை

இருங்கரை நின்ற உப்பொய் சகடம்

பெரும்பெயல் தலைய வீஇந்த தாங்கிவள்

இரும்பல் கூந்தல் இயலணி கண்டே

(குறுந்-165)
 

இதன்கண் தலைவிதன் கதுப்பணி தோன்ற நின்று காட்டியவாறறிக.
 

3) நிறைந்தகாதலின்    சொல்லெதிர்    மழுங்கல் என்பது : தலைவன்
நிரம்பிய காதலுணர்வினான் வினவும் சொற்கு எதிர் மொழி பேச  இயலாது
நிற்றல். இது தலைவன் நீடு நினைந்திரங்கிக் கூறுதற்கண் நிகழும்.
 

எ - டு :

சொல்லின் சொல்லெதிர் கொள்ளாய் யாழநின்

திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமெனக்

காமங் கைம்மிகின் தாங்குதல் எளிதோ

கொடுங்கேழ் இரும்புறம் நடுங்கக் குத்திப்

புலிவிளை யாடிய புலவுநாறு வேழத்தின்