| தலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின் |
| கண்ணே கதவ அல்ல நண்ணார் |
| அரண்டலை மதில ராகவும் முரசுகொண்டு |
| ஓம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன் |
| பெரும்பெயர்க் கூடல் அன்னநின் |
| கரும்புடைத் தோளும் உடையவா லணங்கே |
(நற்-39) |
இம்மூன்றும் தலைவியது செயற்பாடு பற்றியவையாதலின் இக் கிளவிகளின் நிகழ்வு தலைவன் கூற்றாற் புலப்படும் என அறிக. |
4) வழிபாடுமறுத்தல் என்பது : தலைவன் வேட்கை மிகுதியானே இரந்து நிற்றலை உடன்படாமை தோன்ற இருத்தல். அஃதாவது தலைவனது கருத்திற்கு இசையும் குறிப்பினைப் புலப்படுத்தி நிற்றல். அந்நிலை தலைவன் இரந்து வழிபடுதலை மாற்றுதலின் அதனை 'மறுத்தல்' என்றார். இதற்கிதுவே பொருள் என்பதனை "மறுத்தெதிர் கோடல்" என்பதனானறிக. எ - டு : வந்துழிக் கண்டு கொள்க. |
5) மறுத்தெதிர்கோடல் என்பது : தலைவன் வழிபடுதலை மறுத்தமையோடமையாது அவன் விருப்பினை எற்றுக்கோடல் குறிப்பினளாதல். இது தலைவற்கோதிய கூடுதலுறுதல் என்னுங் கிளவிக்குப் பொருத்த நிகழும். எ-டு. வந்துழிக் கண்டுகொள்க. |
6) பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல் என்பது : தலைவனது விருப்பத்திற்கு உடன்பாடு தோன்றக் குற்றமற்ற சிறு நகையை அளவாகப் புரிதல். |
| எ - டு : | யான்நோக்குங் காலைநிலன் நோக்கும் நோக்காக்கால் |
| தான்நோக்கி மெல்ல நகும் |
(குறள்) |
7) கைப்பட்டுக் கலங்கினும் என்பது : தலைவன் பொய் பாராட்டுதலைப் புரிந்து இடம் பெற்றுத் தழுவுங்கால் அதுகாறும் அறியாததோர் ஊற்றுணர்ச்சியானே உள்ளங்கலக்க முறுதற் கண்ணும். |
| எ - டு : | கொடியவும் கோட்டவும் நீரின்றி நிறம்பெறப் |
| பொடியழற் புறந்தந்த பூவாப்பூப் பொலன்கோதை |
| தொடிசெறி யாப்பமை அரிமுன்கை அணைத் |
| தோளாய்! |
| அடியுறை யருளாமை ஒத்ததோ நினக்கு என்ன |
| நரந்தம்நா றிருங்கூந்தல் எஞ்சாது நனிபற்றிப் |