54களவியல்

தலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின்

கண்ணே கதவ அல்ல நண்ணார்

அரண்டலை மதில ராகவும் முரசுகொண்டு

ஓம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன்

பெரும்பெயர்க் கூடல் அன்னநின்

கரும்புடைத் தோளும் உடையவா லணங்கே

(நற்-39)
 

இம்மூன்றும்    தலைவியது    செயற்பாடு     பற்றியவையாதலின்   இக்
கிளவிகளின் நிகழ்வு தலைவன் கூற்றாற் புலப்படும் என அறிக.
 

4) வழிபாடுமறுத்தல் என்பது : தலைவன் வேட்கை மிகுதியானே இரந்து
நிற்றலை   உடன்படாமை    தோன்ற  இருத்தல்.  அஃதாவது தலைவனது
கருத்திற்கு  இசையும்  குறிப்பினைப்    புலப்படுத்தி   நிற்றல்.  அந்நிலை
தலைவன் இரந்து வழிபடுதலை  மாற்றுதலின் அதனை  'மறுத்தல்' என்றார்.
இதற்கிதுவே பொருள் என்பதனை "மறுத்தெதிர்  கோடல்" என்பதனானறிக.
எ - டு : வந்துழிக் கண்டு கொள்க.
 

5) மறுத்தெதிர்கோடல்     என்பது   :   தலைவன்     வழிபடுதலை
மறுத்தமையோடமையாது      அவன்     விருப்பினை    எற்றுக்கோடல்
குறிப்பினளாதல். இது தலைவற்கோதிய கூடுதலுறுதல்  என்னுங் கிளவிக்குப்
பொருத்த நிகழும். எ-டு. வந்துழிக் கண்டுகொள்க.
 

6) பழிதீர்    முறுவல்    சிறிதே   தோற்றல்  என்பது  : தலைவனது
விருப்பத்திற்கு உடன்பாடு தோன்றக் குற்றமற்ற சிறு  நகையை  அளவாகப்
புரிதல்.
 

எ - டு :

யான்நோக்குங் காலைநிலன் நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்

(குறள்)
 

7) கைப்பட்டுக்   கலங்கினும்    என்பது :      தலைவன்     பொய்
பாராட்டுதலைப்    புரிந்து   இடம்   பெற்றுத்   தழுவுங்கால் அதுகாறும்
அறியாததோர் ஊற்றுணர்ச்சியானே உள்ளங்கலக்க முறுதற் கண்ணும்.
 

எ - டு :

கொடியவும் கோட்டவும் நீரின்றி நிறம்பெறப்

பொடியழற் புறந்தந்த பூவாப்பூப் பொலன்கோதை

தொடிசெறி யாப்பமை அரிமுன்கை அணைத்

தோளாய்!

அடியுறை யருளாமை ஒத்ததோ நினக்கு என்ன

நரந்தம்நா றிருங்கூந்தல் எஞ்சாது நனிபற்றிப்