62களவியல்

26) வெறியாட்டிடத்து   வெருவின்   கண்ணும்   என்பது : தலைவியது
நிலைமையினை அறிந்து கொள்ளத் தாயர் வெறியாட்டு நிகழ்த்தி  வேலனை
வினாவும் வழி, அதுகண்டு அஞ்சுதற் கண்ணும் என்றவாறு.
 

எ - டு :

நம்முறு துயரம் நோக்கி அன்னை

வேலற் றந்தந்தன ளாயின் வேலன்

வெறிகமழ் நாடன் கேண்மை

அறியுமோ தில்ல செறியெயிற் றோயே

(ஐங்-241)
 

எனவரும்.
 

27) குறியின்   ஒப்புமை   மருடற்  கண்ணும் என்பது: தலைவன் தனது
வரவுணர்த்த   இயற்றும்  செய்குறி  அவனான்  நிகழாமல் பிறிது ஏதுவாக
நிகழ்ந்துழி  ஒப்புமையான்   அதனைத்   தலைவன்   செய்த   குறியாகக்
கருதிச்  சென்று  அது  பொய்யாயினமையறிந்து   உள்ளம்       மயங்கி
வருந்துமிடத்தும் என்றவாறு. என்றது, அல்ல குறிப்பட்டு வருந்துதல்.
 

இங்ஙனம்   குறியின்   ஒப்புமையான் மருள்தல் பெரும்பான்மையையும்
இரவுக் குறிக்கண்ணே யாமெனக் கொள்க.
 

எ - டு :

அணிகடற் றண்சேர்ப்பன் தேர்ப்பரிமா பூண்ட

மணியரவம் என்றெழுந்து போந்தேன்-கணிவிரும்பு

புள்ளரவங் கேட்டுப் பெயர்ந்தேன் ஒளியிழாய்

உள்ளருகு நெஞ்சினேன் யான்

(ஐந்-ஐம்.50)
 

28) வரைவுதலைவரினும் என்பது :  தலைவன்  வரைதலை  நேர்ந்தான்
என அறிந்தவிடத்தும் என்றவாறு.
 

எ - டு :

கொல்லைப் புனத்த அகில்சுமந்து கற்பாய்ந்து

வானின் அருவி ததும்பக் கவினிய

நாடன் நயமுடையான் என்பதனான் நீப்பினும்

வாடல் மறந்தன தோள்

(ஐந் - எழு - 2)
 

29) களவறிவுறினும்     என்பது  :   களவொழுக்கம் நற்றாய் முதலாய
தமர்க்குப் புலனாய விடத்தும் என்றவாறு.
 

எ - டு :

நான்மழை தலைஇய நன்னெடுங் குன்றத்து

மால்கடற் றிரையின் இழிதரும் அருவி

அகலிருங் கானத் தல்கணி நோக்கித்

தாங்கவும் தகைவரை நில்லா நீர்சுழல்

போதெழில் மழைகண் கலுழ்தலின் அன்னை