பக்கம் எண் :

ஏனோர் மருங்கினும் எண்ணுங் காலை சூ 24193

இது, புணர்தற்பொருளாயினும் திலத்தான் 22நெய்தலாயிற்று.
  

“கோட்டக மலர்ந்த கொழுங்கொடி அடம்பின்
நற்றுறை
23அணிநீர்ச் சேர்ப்பஇப்
பொற்றொடி அரிவையைப் போற்றினை அளிமே.”
  

இது பாலைக்குரித்தாகிய பிரிவு நிமித்தமாயினும் நிலத்தான் நெய்தலாயிற்று.
  

நச்சினார்க்கினியர்
  

  

24. ஏனோர் பாங்கினு..............பெயரே.
  

இது   முல்லையுங்   குறிஞ்சியும்   ஒழிந்தவற்றுள்   திணை   தொறு   மரீஇய   பெயருடையோரிலுந்
திணைநிலைப் பெயராகிய தலை மக்களாய் வழங்குவாரும் உளரென எய்தாத தெய்துவித்தது.
  

இதன்    பொருள்:- ஏனோர் பாங்கினுந் திணைநிலைப் பெயர் எண்ணுங் காலை ஒழிந்த பாலைக்கும்
நெய்தற்கும்1  உரியராகக்  கூறிய  மக்கள்  கூற்றினும்  வருந்  தலைமக்கள் பெயரை ஆராயுங் காலத்து,
ஆனாவகைய - அவை பெரும் பான்மையாகிய கூறுபாட்டினையுடைய என்றவாறு.
  

உதாரணம் :-
  

சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக்
கொலைவி லெயினர் தங்கைநின் முலைய
சுணங்கென நினைதி நீயே
யணங்கென நினையுமென் ணைங்குறு நெஞ்சே”
  

(ஐங்குறு-363)
  


22. சுறவுப்பிறழ் இருங்கழி என நெய்தல் நிலம் வந்ததால்.
  

23. அணி  நீர்ச்சேர்ப்பு  என்பதால்  நெய்தல்நிலம். சேர்ப்ப என்பதால் திணைநிலைப் பெயரும்  அடம்பு என்னும்  கொடியால் கருப்பொருளும் காண்க. நிலத்தானும் கருப்பொருளானும் என்றிருப்பின் நன்று.
  

1. மருதம் விடுபட்டது. காரணம் பின்னர்க் கூறுவர்