பக்கம் எண் :

300தொல்காப்பியம் - உரைவளம்

என்னும்  நின்னினுஞ்  சிறந்தோன்  தலைவ  னென்று  தவிர்தல் தருமநூல் விதி என்பது.  இனி விழவ
யர்ந்திருப்பினல்லதை எனவே மீட்டற்குச் சேறல் அறனன் றென்று மீட்டாளாயிற்று.
  

“அன்னை வாழியோ வன்னை நின்மக
ளென்னினும் யாயினு நின்னினுஞ் சிறந்த
தன்மை ரிளந்துணை மருட்டலின் முனாது
வென்வேற் புல்லி வேங்கட் நெடுவரை
மழையொடு மிடைந்த வயக்களிற் றருஞ்சுரம்
விழைவுடை யுள்ளமொ டுழைவயிற் பிரியாது
வவன்கண் செய்தல் புரைவதோ வன்றே.”
   

இது தாயை4 வற்புறுத்தியது.
  

இயல்புற     என்றதனானே   தலைவன்   கரணவகையால்  வரைந்தானாக   எதிர்சென்ற   தோழிக்கு
யான்வரந்தமை   நுமரக்கருணர்த்தல்  வேண்டுமென்றாற்கு  அவள்   உணர்த்தினே  னென்றலுந்  தலைவி
மீண்டு வந்துழி ஊரது நிலைமை கூறுதலுங் கொள்க.
  

“கருவிரன் மந்திக் கல்லா விளம்பார்ப்பு
இருவெதி ரீர்ங்கழை யேறிச் சிறுகோன்
மதிபுடைப் பதுபோற் றோன்று நாட
வரைந்தனை நீயெனக் கேட்டியா
னுரைத்தனெ னல்லனோ வஃதென் யாய்க்கே.”
  

(ஐங்குறு-280)
 

“புள்ளு மறியாப் பல்பழம் பழுனி
மடமா னறியாத் தடநீர் நிலைஇச்
சுரநனி யினிய வாகுக வென்று
நினைத்தொறுங் கலுமு மென்னினு
மிகப்பெரிது கலங்கின்று தோழிநம் மூரே.”  

(ஐங்குறு-398)
 

இன்னும் இதனானே செய்யுட்கண் வேறுபட வருவன வெல்லாம் அமைத்துக் கொள்க.
  

“ஊஉ ரலரெழச் சேரி கல்லென
ஆனா தலைக்கு மறனி லன்னை
   


4 தாயை மீளச் செய்தாள்